Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
[11 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் சந்திரசேன குற்றச்சாட்டு

கடந்த வருடம் நாட்டிலுள்ள 119 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 14 ஆயிரம் கிராமங்களில் ஜனசவிய, கமநெகும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதிகாரிகளின் இழுபறி காரணமாகவும் அனுபவமின்மையாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது போய்விட்டதாக தெரிவித்துள்ள தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இவ்வருடம் இவ்வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் மாத்தளை செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்களின் ஒன்றுகூடலுக்கு தலைமை வகித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதையும், கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதையுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றார். இவ்விரு செயல்பாடுகளுக்கும் பல பில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்து வருகிறார்.

கமநெகும வேலை திட்டத்திற்கு கடந்த வருடத்தை விட மும்மடங்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அத்துடன், இவ்வேலைத்திட்டத்திற்கு உறுதுணையாக செயற்பட ஏனைய அனைத்து அமைச்சுகளுக்கும் சுமார் 600 மில்லியன் ரூபா வரையிலான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே, கமநெகும வேலை திட்டத்தை மேற்கொள்ளும் போது அனைத்து அமைச்சுக்களுடனும் தொடர்புகொண்டு நிதியுதவி பெற்று அந்தந்த அமைச்சுகளுக்கூடாக செய்துகொள்ள வேண்டிய வேலைகளை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண திசாநாயக பேசும்போது கூறியதாவது;

தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சரின் உயரதிகாரிகள் திட்டமிட்டு வேலைகளை மேற்கொள்ள தவறுவதால், கமநெகும வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியாமல் உள்ளது.

முதலில் அனுப்பப்படும் சுற்றறிக்கையின் பிரகாரம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போது, அடுத்த வாரம் அதற்கு முரணான முறையில் மற்றுமொரு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்படுகிறது.

2 ஆவது சுற்றறிக்கையின் பிரகாரம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போது 3 ஆம் வாரம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட 2 சுற்றறிக்கைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் மற்றுமொரு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்கனவே செலவழிக்கப்பட்ட நிதியும், மனித சக்தியும், காலநேரமும் வீண் விரயமாகின்றது. எனவே, அமைச்சர் சந்திரசேன இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி அமைச்சின் உயரதிகாரிகள் கருத்தொருமித்து திட்டமிட்டு செயற்பட, உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். இதன் மூலமே கமநெகும வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் என்றார்.

அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எம். கீர்த்திரட்ண பேசும்போது கூறியதாவது;

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கமநெகும வேலைத்திட்டம் வெற்றியளித்ததாக கூறமுடியாது.

இவ்வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருக்குமானால் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரமாட்டார்கள் என்றார்.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com