Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
[11 - April - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதி அனுதாபம்

எம்.ஏ.எம்.நிலாம்

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குமான செயற்பாடுகளுக்கு என்னோடு தோளோடு தோள் நின்று உழைத்த தேசப்பற்றுமிக்க யுக புருஷனாக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

நேற்று வியாழக்கிழமை கட்டானை வெலிஹேனவில் இடம் பெற்ற மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குக்கு அனுப்பிவைத்திருந்த அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அனுதாபச் செய்தியை அமைச்சர் நிமல் ஷ்ரீபால டி சில்வா வாசித்தார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

37 வருடங்களுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானும் ஜெயராஜும் நண்பர்களானோம். மாணவர் தலைவரான ஜெயராஜ் எனது நம்பிக்கைக்குரிய போராட்டச் சகாவாகவும் நெருங்கிய நண்பனாகவும் ஆனார். என்னை நேரானபாதையில் வழிநடத்திய ஆசானாகக் கூட அவர் காணப்பட்டார். ஒரே அறையில் தங்கி நாம் பாடங்களை மீட்டிய காலத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. விடுமுறைக்காலத்தில் எமது மெதமுலன வீட்டுக்கு வந்து விடுமுறையை கழித்ததையும் மறக்கவியலாது.

அன்று யாழ்.தேவியில் ஏறி யாழ்ப்பாணம் போய் தமிழ் நண்பர்களுடன் தோசை சாப்பிட்டுவிட்டு காரைநகர் கடலோரத்தில் குதூகலமாக இருந்ததும் இன்றும் நினைத்துப்பார்க்கும் போது மகிழ்ச்சி தருகின்றது.

அடுத்தகட்டமாகப் பாராளுமன்றத்தில் நாமிருவரும் ஒரே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து. ஒரே கொள்கை அரசியலில் செயற்படத் தொடங்கினோம். அந்த இறுக்கம் இறுதிவரையில் நீடித்து நிலைத்தது. சவால்களைத் தைரியமாக எதிர் கொண்டவர். மக்கள் சேவைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த நண்பர் ஜெயராஜ் இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக முன்னின்று உழைத்தவர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் எமது போராட்டத்திலும், நாட்டின் ஒருமைப்பாட்டைப்பாதுகாக்கும் தேசப்பற்று மிக்க நடவடிக்கையிலும் எம்மோடு கரம் கோர்த்துச் செயற்பட்டவர்.

நண்பர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் பெயர் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது உறுதியானதாகும்.

மிலேச்சத்தனமான பயங்கரவாதம் படுகொலை செய்திருப்பது ஜெயராஜை மட்டுமல்ல அவர் பாதுகாத்த ஜனநாயகக் கோட்பாடும் படு கொலை செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜின் உடலைப் பார்க்க வந்த போது அன்னாரது மனைவியினதும், மகன், மகள் இருவரதும் கண்களிலிருந்து வெள்ளமாக வந்த கண்ணீரைக்கண்டு நான் நிலைகுலைந்து போனேன்.

நண்பனே நீ என்றுமே எம்மை விட்டுப்பிரியமட்டாய், எதிரிகள் உன் உயிரைப்பறிக்கலாம், உனது உடலை இனிமேல் நாம் காணமுடியாது போகலாம். ஆனால் உனது வழிகாட்டலும் உனது நினைவுகளும் எவராலும் ஒருபோதும் பறித்தெடுக்க முடியாது. நீ மரணிக்காத மனிதனாக என்றென்றும் எம்மோடு வாழ்வாய் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.

பிரதமர் இரங்கலுரை

பிரதமர் இரட்னசிறி விக்கிரம நாயக்கா தமது இரங்கலுரையின் போது தெரிவித்ததாவது;

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எதிர்பார்த்த சமாதான பூமியை விரைவில் நாம் உருவாக்க இந்த இடத்தில் உறுதியாயிருக்கின்றோம். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.

ஜெயராஜின் கனவை நனவாக்குவதில் நாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை. மனித குலத்தை நேசித்த அவர் பயங்கரவாதத்தை வெறுத்தவராவார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதே அவரது ஒரே இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியக் கனவை நாம் விரைவில் நனவாக்குவோம் என்று சபதமெடுப்போம், அதுவே அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் என்று தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com