Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
[11 - April - 2008] [Font Size - A - A - A]
அண்மையில் வெளியாகிய 2007 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி.ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் `ஏ' சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இவரோடு இணைந்து பிறந்தவரான செல்வி. ரேணுகா பாலசுப்பிரமணியமும் 10 பாடங்களிலும் `ஏ' சித்தியைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

பன்னாலை. தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த இரட்டைச் சகோதரிகள் காலஞ்சென்ற இ.பாலசுப்பிரமணியம், திருமதி பா.விக்னேஸ்வரி ஆகியோரின் புதல்விகளாவர். இவர்களது தந்தை மிகச்சிறந்த ஒரு கணித ஆசிரியராவார். மிகச் சிறு வயதிலேயே இவர்கள் தமது தந்தையாரை இழந்திருந்தாலும் தம் பிள்ளைகளை ஊக்குவித்து சிறந்த ஒரு வழிகாட்டியாக வாழும் பெருமை இவர்களது தாயாரையே சாரும்.

இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை யா/தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கற்றனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் செல்வி. ரேகா பாலசுப்பிரமணியம் 174 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 8 ஆம் இடத்தையும் பெற்றவர். அதன் பின்னர் இருவரும் தமது கல்வியை யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றனர். நாட்டுச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து கொழும்பிற்கு வந்த இருவரும் தமது கல்வியை கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தொடர்ந்தனர்.

தமது கல்விப் பாதையின் ஆரம்பப் படிகளில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் தாம் சிறந்த முறையில் கல்வி கற்கக் காரணமாக இருந்த தாய், சகோதரன், உறவினர்கள் ஆகியோரோடு, சிறிய பாடசாலையாக இருந்தாலும் தமக்கு இடமளித்து உதவிய பாடசாலை அதிபர் திருமதி இ.ராஜரட்ணத்தையும் எந்தவிதமான பின் வாங்கலும் இன்றி மனமுவந்து கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைப்பதாக ரேகா, ரேணுகா சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
நல்லூரில் படைவீரர் சுட்டுக்கொலை
ஜே.வி.பி. இரண்டாக பிளவுபட்டதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உணவு விலை அதிகரிப்பு 2015 வரை நீடித்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான இலங்கையர் போதிய உணவின்றி வாடும் அபாயம்
ஜெயராஜின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம்
மன்னார் மோதலில் 6 படையினர் காயம்
`சதிமூலம் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தும் அவசியம் ஐ.தே.க.வுக்கு இல்லை'
`உம்றா' வுக்காக ஹக்கீம் மக்கா பயணம்
மலையக கைதுகளுக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை ஆரம்பிக்க முயற்சி
`75 ஆயிரம் படையினர் இன்று எல்லை பிரதேசங்களில் முடங்கிப்போயுள்ளனர்'
சட்டத்தை மக்கள் தமது கரங்களில் எடுக்கும் நிலைமை அரசு மதியாது செயற்படுவதாலேயே இந்த அவலம்
10 ஏ பெற்று சாதனை படைத்துள்ள ரேகா, ரேணுகா இரட்டைச்சகோதரிகள்
முதல்நாள் பிறந்த சிசுவை கிணற்றில் போட்டு கொன்ற இளம் தாய் பொலிஸாரால் கைது
தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல் தனியார் பஸ்களுக்கு சபை அறிவுறுத்தல்
* `60 ரூபாவுக்கு அரிசி' என்ற தலைப்புச் செய்தி பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த குடும்பப் பெண்கள் ஆர்ப்பாட்டம்
வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
கம்பஹாவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவு
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எனது தோளோடு தோள் நின்றவர் ஜெயராஜ்
வன்னி படைத்தலைமையகத்துக்கு இராணுவத்தளபதி திடீர் விஜயம்
அலம்பில் பகுதியில் விமானத்தாக்குதல்
கொள்ளையர் தாக்குதல் 8 பேர் காயம்
அதிகாரிகளின் அனுபவமின்மையே கமநெகும வேலைத்திட்ட இலக்கை அடைய முடியாதுள்ளது
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டுமொரு சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
குடாநாட்டு மக்களுக்கு நியாய விலையில் சீமெந்து
வடக்கு- கிழக்கில் கடந்த மாதத்தில் 18 பேர் கொலை; 20 பேரை காணவில்லை
மடுவை யுத்த சூனியப் பிரதேசமாக்க வேண்டுமென்ற கிறிஸ்தவ சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
ஐ.நா.வை புலிகள் தவறாக வழிநடத்துவதாக டியூ குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெயராஜின் படுகொலைச்சம்பவம் இலங்கையர் அனைவருக்கும் பேரிழப்பாகும்
`ஜெயராஜின் மறைவு மலையக மக்களுக்கும் சமாதான விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்'
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஆயுதக்குழு என்னிடமிருப்பதை நிரூபித்தால் அமைச்சு பதவியை உடனடியாக துறப்பேன்
`சமாதானத்துக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துணிச்சலுடன் குரலெழுப்பியவர் ஜெயராஜ்'
ஜே.வி.பி. அதிருப்திக் குழுவின் செய்தியாளர் மாநாட்டில் பத்திரண பலவந்தமாக வெளியேற்றப்பட்டதேன்? ?வீரவன்சவை விமர்சித்ததால் என்கிறார் விக்கிர மபாகு
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே கிழக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது
எம்பிலிப்பிட்டிய,சூரியவெவ பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் நியமிப்பு
பிரதியமைச்சரின் தலையீட்டின் பின் பொலிஸார் அகற்றப்பட்டனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com