Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
[12 - April - 2008] [Font Size - A - A - A]
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு

திருகோணமலை மாவட்ட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சரணடைந்த ஜயந்த விஜயசேகரவையே எதிர்வரும் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில், அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. அதிருப்தி எம்.பி.க்கள் இருவரின் வாகனங்கள் காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்துடன் ஜயந்த விஜயசேகர எம்.பி.க்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவும் வெலிக்கடைப் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று விஜிதஹேரத் எம்.பி. மற்றும் சட்டத்தரணி சகிதம் வெலிக்கடை பொலிஸ் நிலையம் சென்ற ஜயந்த விஜயசேகர அங்கு சரணடைந்தார். இதையடுத்து, பொலிஸார் அவரை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Email this page Your Opinion Print this page
தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கல்
போலி நிதி ஸ்தாபனம் நடாத்திய கும்பல் தம்புள்ள பிரதேசத்தில் தலைமறைவு
அமெரிக்கா செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த கல்வியங்காடு குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது
கரடிபூவல் கிராமத்தில் 2 இளைஞர் ஆயுத பாணிகளால் கடத்தப்பட்டனர்
ஜே.வி.பி.உறுப்பினரின் கடத்தப்பட்ட வாகனம் மீட்பு
ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்தக் கோரி மலையகத்திலும் கையொப்பம் திரட்டும் பணிகள் முன்னெடுப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
இலங்கையில் பணிபுரியும் ஐ.நா. ஊழியரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட குழு ஆராய்வு
மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு *4 பொதுமக்கள் காயம்
வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
விமானப்படையின் 5 ஆவது தளபதி ஹரி குணதிலக்க காலமானார்
அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த ஜே.வி.பி. பெண் எம்.பி. குத்துக்கரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com