மிகிந்தலைப் பகுதியில் இராணுவ சாவடியிலிருந்து துவக்குச் சூடு
?4 பொதுமக்கள் காயம்
மிகிந்தலை தொரமடலாவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தொரமடலாவ வீதிச் சோதனை நிலைய இராணுவக் காவலரணிலிருந்து இராணுவச் சிப்பாய்யொருவர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த நால்வரும் படுகாயமடைந்தனர்.
காவலரணிலிருந்த மேற்படி இராணுவச் சிப்பாயுடன் இவர்கள் சச்சரவில் ஈடுபட்ட நிலையிலேயே சின மடைந்த அந்தச் சிப்பாய் இந்த நால்வர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த நால்வரும் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருவர் அவசர சத்திர சிகிச்சைக்குட் படுத்தப்பட்டனர். ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நால்வரும் தொரமடலாவ பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.