குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை
யாழ்நகர் நிருபர்
யாழ்.குடாநாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை கைதடியிலும் நேற்று நண்பகல் நீர்வேலியிலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி கைதடி மேற்கில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சலவை நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கைதடி மேற்கிலுள்ள இவரது சலவை நிலையத்திற்கு நேற்றுக் காலை 10 மணியளவில்
மோட்டார் சைக்கிளொன்றில் சென்றவர்களே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான பண்டாரி பரமநாதன் (34 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இதேநேரம், நேற்று நண்பகல் நீர்வேலி பகுதியில் இளம் தச்சுத் தொழிலாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளொன்றில் வந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த குணசிங்கம் சுரேஷ்குமார் (27 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவ்விருவரது சடலங்களும் பின்னர் யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர்.