கரடிபூவல் கிராமத்தில் 2 இளைஞர் ஆயுத பாணிகளால் கடத்தப்பட்டனர்
முந்தல் நிருபர்
புத்தளம் வண்ணாத்துவில்லு பொலிஸ் பிரிவிலுள்ள கரடிபூவல் கிராமத்தில் ஆயுதக்குழுவொன்றினால் இரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீடுகளுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவொன்றே இவர்கள் இருவரையும் கடத்திச் சென்றதாக வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் சத்தியகுமார் (27 வயது), கோவிந்தன் நாகராஜா (27 வயது) ஆகிய இருவருமே கடத்தப்பட்டவர்களாவர்.