Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

"இலங்கை தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமேயென என்று விடுதலைப் புலிகள் சாடியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை வெளியான "விடுதலைப்புலிகள்" ஏட்டின் 140 ஆவது இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண இலங்கை அரசு விரும்பவில்லை என்ற உண்மையையும், இராணுவத்தீர்வு மூலம் தமிழினத்தை அடிமைப்படுத்த அது முயல்கிறது என்ற யதார்த்தத்தையும் இப்போது, சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.

போர் வெறிகொண்ட "கடும் போக்காளர்கள்" "சமாதான வழியில் நாட்டமில்லாதவர்கள்" என்றவாறாகப் புலிகள் மீது அரசு தொடுத்து வந்த அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உண்மையில் உரித்துடையவர்கள் இலங்கை ஆட்சியாளர்கள்தான் என்ற உண்மையையும் உலகம் உணரதொடங்கியுள்ளது.

இவற்றின் விளைவாக இலங்கை அரசுடனான சர்வதேச உறவிலும் நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கியுள்ளன.

இலங்கை அரசிற்கான போராயுதங்களையும், பொருண்மிய உதவிகளையும், போருக்கான அரசியல் ஆதரவுகளையும் முன்னர் வழங்கி வந்த உலகப் பெருநாடுகள் தமது பொருள் உதவிகளையும், தார்மீக ஆதரவுகளையும் படிப்படியாக நிறுத்தி வருகின்றன.

இதனால் இலங்கை அரசின் போர் இயந்திரம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க முடியாமல் அரசு தத்தளித்துக் கொண்டிருக்கும் இத்தகைய அரசியல், இராணுவச் சூழலில் இலங்கையில் இன அழிப்புப் போருக்கு இராணுவ உதவிகள் புரிந்து அரசியல் ஆதரவு கொடுக்க முற்படும் இந்திய அரசின் செயல் தமிழ் மக்களைக் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதுடன் சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை அரச படைகள் போரில் இழப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் போதெல்லாம் தளபதிகள் அவசர அவசரமாக இந்தியப் பயணம் செய்வதும், அங்கே அரச தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் சந்திப்பதும் வழமையாக உள்ளது.

தமிழரை இன அழிப்பிற்குள்ளாக்குவதில் பொறுப்பாக நின்று செயற்படும் அந்த தளபதிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிப்பதில் இந்திய ஆட்சிபீடம் அக்கறை காட்டுவதையும் உலகம் அவதானித்த படியே உள்ளது.

இலங்கை அரசின் போர் நடவடிக்கையுடன் இந்தியத் தேசிய நலனை இணைத்து அதிகாரிகள் வெளியிடும் உத்தியோகபூர்வ கருத்துக்கள் தமிழ் மக்களைப் புண்படுத்தி வருகின்றன.

இலங்கைக்கு வேறு நாடுகளின் ஆயுதங்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கருத்தும். இலங்கைப் படைகள் சோர்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை என்ற இந்திய இராணுவப் பேச்சாளரின் கருத்தும் இலங்கை அரசிற்கு இராணுவ உதவிகள் புரிந்துவரும் இந்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முனைகின்றன.

இலங்கை அரசின் போரிற்கு உதவிகள் புரிந்து, ஒத்தாசையாக இருக்கும் அதேசமயம், அது ஆக்கிரமித்த தமிழர் நிலப்பகுதிகளில் பொருண்மிய நன்மைகளைப் பெற முயலும் சிறுமைத்தனத்திலும் இந்திய அரசு அக்கறை காட்டி வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியை படைகள் ஆக்கிரமித்த பின்னர் அங்கே ஒரு அனல் மின்நிலையத்தை இலங்கை அரசுடன் இணைந்து நிறுவும் முயற்சிக்கு இந்திய அரசும் உடன்பட்டுள்ளது.

இதுபோன்று, இந்தியாவில் உள்ள மின் பிறப்பாக்கி நிலையம் ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை படையின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலம் தலைமன்னார் வழியாக அனுராதபுரம் வரை எடுத்துச் சென்று விற்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்க முனையும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இந்திய அரசின் இந்த வர்த்தக முயற்சிகள் அமைந்திருக்கின்றன.

இவ்விதம் தமிழரை இனக்கொலை செய்யும் இலங்கை அரசுக்கு இராணுவ, அரசியல், பொருண்மிய உதவிகளை இந்திய அரசு நல்கிவருகின்றது.

இதனால் தான் இந்திய அரசின் அனைத்து வகை ஆதரவுடனும் இலங்கை அரசு செய்யும் தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

"இலங்கை போர் நிறுத்தப்பட வேண்டும், தமிழரின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே காணப்பட வேண்டும்" என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகளை வெறும் வாய்ச்சொற்களாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com