ஜப்பானிய அரசாங்கம் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கான "மொங்புகா கஹசசோ" புலமைப்பரிசில் திட்டமொன்றை (2009) அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கற்கைநெறிக்கு தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள், இளநிலை பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான பட்டப்பின் படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இத்திட்டத்துக்கென உயர்கல்வி அமைச்சுக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி அடுத்த மாதம் (மே) 9 ஆம் திகதியாகும்.
இப்புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிய தினசரி பத்திரிகையில் வெளியிடும் விளம்பரங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அல்லது அமைச்சின் இணையத் தளத்தின் மூலமும் இதற்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பார்வையிட முடியும். விண்ணப்பங்களை நேரடியாக பெறவிரும்புவோர், உயர்கல்வி அமைச்சு, இல:18, வார்ட் பிளேஸ், கொழும்பு-7 என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இப்புலமைப்பரிசில் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.mohe.gov.lk என்ற இணையத்தள முகவரியுடனும் பரீட்சைக்கான கடந்த கால வினாப்பத்திரங்களை பெறுவதற்கு www.studyjapan.go.jp/en/ltos/toj0308e.htm # 1 என்ற இணையத்தள முகவரி மூலமாகவும் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
தொலைபேசி மூலமான தொடர்புகளுக்கு 0112693837/3 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் ஜப்பானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.