Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர்

எம்.ஏ.எம்.நிலாம்

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு தகவல் திணைக்களத்தினூடாக முழு அளவிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் நிறக்கண்ணாடிகளைப் போட்டுக் கொள்ளாமல் பாரபட்சமற்ற விதத்தில் நேர்மையுடன் தமது பணியைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

ஷ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் மீடியா டயறி வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கொழும்பு சோனக விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய தகவல் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட கூறியதாவது;

ஊடகவியலாளர்கள் புத்திக் கூர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் நடுநிலையாளர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக இடையிடையே பயிற்சிப் பட்டறைகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். தகவல், ஊடகத்துறை அமைச்சர் இந்த விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார்.

அரச தகவல் திணைக்களம் நாட்டின் பல பிரதேசங்களிலும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது. இவை இதுவரையில் சிங்கள மொழி மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி தமிழ் மொழி மூலமும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த முஸ்லிம் மீடியா போரம் சுட்டிக் காட்டியது. இத் தவறை நாம் உணர்கின்றோம். அத்தவறுக்காக வருந்துகின்றோம். இனிமேல் அப்படி நடக்க இடமளிக்க மாட்டேன். அடுத்த கருத்தரங்கு முதல் சமகாலத்தில் இரண்டு மொழிகளிலும் பயிற்சிப் பட்டறையும், கருத்தரங்கும் நடத்தப்படும்.

முஸ்லிம் ஊடகவியலாளர்களில் பெரும்பான்மையினர் மும்மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எல்லோரும் போல் தமிழ் மொழியுடன் சிங்கள மொழித் தேர்ச்சி பெற்றவர்களாக காணப்படுகின்றனர். இது மகிழ்ச்சி தரக் கூடியதாக உள்ளது. சகல இனங்களுக்குமிடையில் சமாதானம், சகவாழ்வு, புரிந்துணர்வு போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான அரும்பணியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அது உங்கள் மீதான கடப்பாடு என்பதையும் மறந்து விடாதீர்கள்.

உங்களுடைய இந்த அமைப்பினூடாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுக்கும், உயர் கல்வி நிலையங்களிலும் ஊடகத்துறை தொடர்பாகவும், சமாதான சகவாழ்வு தொடர்பாகவும் தொடர் கருத்தரங்குகளை நடத்தி வருவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். நாம் மேற்கொள்ள வேண்டிய பெரும் பணியை நீங்கள் செய்கின்றீர்கள். அதற்காக எமது நன்றிகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் வறிய ஊடகவியலாளர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கான புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.

மூன்றாவது தடவையாகவும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் சுய விபரக் கோவையை வெளியிட்டிருக்கிறீர்கள். இது அனைவருக்கும் மிகப் பயன்பாடுடையதாகவே கருதுகின்றோம்.

இன்றைய உலகை ஊடகமே ஆண்டு கொண்டிருக்கின்றதென்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனடிப்படையில் தகவல் திணைக்கள ஊடகவியலாளர்களின் பணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரம் உட்பட ஏனைய ஊடக அமைப்புகளுடன் திணைக்களம் உறவுகளை பேணி வருகின்றதென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வைபவத்தில் `கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம்களும்' எனும் பொருளில் அரசியல் ஆய்வாளர் எம்.ஐ.எம்.முகைதீன் சிறப்புரையாற்றினார். அத்துடன் தலைவர் என்.எம்.அமீன், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், பொதுச் செயலாளர் தாஹா முஸ்ஸம்மில் உட்பட பலரும் பேசினர்.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com