Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
[15 - April - 2008] [Font Size - A - A - A]
* மங்கள- அநுரகுமார பேச்சுவார்த்தை

எம்.ஏ.எம்.நிலாம்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சோமவன்ச அமரசிங்கவின் தலைமையிலான அணியுடன் ரணில்- மங்கள சமரவீர ஆகியோரின் புதிய அமைப்பான தேசிய சபை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.

இந்த இணைவு தொடர்பில் ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளர் மங்கள சமரவீரவுக்கும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்காவுக்கும்மிடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருப்பதாகவும் அறியவருகின்றது.

அண்மைக்காலத்தில் ஜே.வி.பி.க்குள் முரண்பாடு ஏற்பட்டு அக்கட்சியின் பிரசாரச் செயலாளரான விமல் வீரவன்ச தலைமையில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தியங்கத் தீர்மானித்துள்ளனர்.

விமல் வீரவன்ச தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றச் சதி நடைபெறுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். ஆனால் விமல் வீரவன்ச கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க அவருக்குப் போதிய காலவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

இதனிடையே ஜே.வி.பி.யை சின்னாபின்னப்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டுச் சுமத்தியிருக்கும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.டி.லால்காந்த ஜானாதிபதியினதும் அவரது சகோதரரினதும் திட்டத்தின் பிரதிபலனை விரைவில் அவர்களே அனுபவிக்க நேரிடலாமெனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜே.வி.பி.யை ஜாதிக சபா எனும் தேசிய சபையுடன் இணைத்துக் கொள்வது தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியவருகின்றது.

இம்முயற்சியின் ஆரம்பகட்டப் பேச்சுக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிசாநாயக்கா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகவும் அதில் சாதகமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அநுர குமாரதிசாநாயக்கா ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் அனுமதியுடனேயே இப்பேச்சுக்களில் பங்கேற்றதாகவும் அறிய வருகிறது. தேசிய சபையைப் பலப்படுத்தும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் கூடுதல் அக்கறை காட்டப்பட்டு வருவதாக சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் அரசாங்கத்துடனும் முரண்பட்டிருக்கும் ஜே.வி.பி. அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க விருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த சுட்டிக் காட்டியுள்ளார். ஜே.வி.பி.யிலிருந்து சிலர் வெளியேறுவதாலோ அல்லது வெளியேற்றப்படுவதாலோ அக்கட்சி பலமிழக்கப் போவதில்லை எனவும் கிராமிய மட்டத்தில் அக்கட்சி பலமடைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் லால்காந்த பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேசிய சபையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் அது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாக கருதப்பட முடியாதெனவும் கூறினார்.

எவ்வாறாயினும் தேசிய சபையுடன் இணைவதற்கான இறுதி முடிவெதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டிலிருக்கும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிசாநாயக்கா இவ்வார இறுதியில் நாடு திரும்பவிருப்பதாகவும் அதன் பின்னர் தேசிய சபையுடன் விரிவாக ஆராயப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, ஜே.வி.பி.யை தேசிய சபையுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டி இருப்பதாகவும் அறிய வருகின்றது.

Email this page Your Opinion Print this page
`வட அயர்லாந்தின் அனுபவம் சிறந்த முன்னுதாரணம்'
இருநாள் மோதலில் 8 இராணுவம் 30 புலிகள் பலி; 28 பேர் படுகாயம்
புதுவருட தினத்தில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி; 400 க்கு மேற்பட்டோர் காயம்
தேசிய சபையுடன் ஜே.வி.பி.யை இணைந்து செயற்பட வைக்க முயற்சி
ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ரொக்கட் விற்பனை எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்
இராணுவ காவலரண் மீது மின்னல் தாக்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
எரிக் சொல்ஹெய்முடன் வைகோ சந்திப்பு
நேர்மையின்றி அதிகார விளையாட்டை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதி'யாகும் ஆபத்து
இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
மேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புபெற்ற ஆசிரியர் தொடர்பான சுற்றுநிருபம் வாபஸாகும்
ஊடகவியலாளரின் உரிமைகள், பாதுகாப்பை உறுதிப்படுத்த முழு அளவில் நடவடிக்கை
பதுளை-பசறை வீதி வாகன விபத்தில் இருவர் மரணம், 12 பேர் படுகாயம்
அத்துலகம ஒன்பதாம் நம்பர் பிரதேசத்தில் இடிமின்னல்; ஆறு குடியிருப்புகள் சேதம்
ஆளும் கட்சியின் பிரதம கொரடா யார்? விரைவில் தீர்மானம் என்கிறார் சபை முதல்வர்
எமது மண்ணையும் முஸ்லிம்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி
பொதுமகனை மோதி உயிரிழக்க செய்த குற்றச்சாட்டு; இராணுவ சாரதி கைது
ஜப்பானிய அரசாங்கத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்
மின் விநியோகம் சீராக இல்லாமையால் பெரும் அசௌகரியத்தின் மத்தியில் நோயாளிகள்
படையினர், பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கு அரசு வகை செய்ய வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இந்திய அரசு கூறுவது வெறும் வாய்ச்சொற்கள் மட்டுமே
இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை
சர்வகட்சி குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறு கிடைக்கும்
மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்
மயக்கபானம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையடித்த இருவர் கைது
பிரிட்டனில் முதல் தடவையாக தமிழர் மெய்வல்லுநர் போட்டி
பயணிகள் நலன் கருதி விசேட பஸ், ரயில் சேவை
மடு, மாந்தை இராணுவ நடவடிக்கையால் 25,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு
ஆலையடிவேம்பில் 345 வீடமைப்பு திட்டம் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறையீடு
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் சேவை
மாணவர்களின் அத்துமீறலால் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com