Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை பற்றிய தீர்க்கமான முடிவொன்றையெடுக்க மக்களால், தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கே அதிகாரம் உள்ளது. இத்தகைய தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் வேறொரு நாட்டிடமோ அல்லது எந்தவொரு குழுவிடமோ ஆலோசனை கேட்கத் தயாரில்லையென்று ஏற்றுமதி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை சிறிபோபுர ஏற்றுமதி காரியாலயத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.

`பயங்கரவாதத்துக்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதேபோல் சமாதானச் செயல் திட்டங்களையும் மேற்கொண்டுவருகிறது.

எமது வாழ்வாதாரத்தையிட்டோ வேறு எந்தச் செயற்பாடுகளையிட்டோ முடிவெடுக்கும் பொறுப்பை நாம் எந்த ஒரு வெளிநாட்டிடமும் ஒப்படைக்கமாட்டோம். எக்காரணம் கொண்டும் எமது இறைமையை தனித்துவத்தை இழக்க நாம் தயாராயில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வளங்களை இறைவன் வழங்கியுள்ளான். மத்திய கிழக்கில் எண்ணெய் வளம். தென் ஆபிரிக்காவில் தங்கம். அமெரிக்காவில் தொழில் நுட்பங்கள் போன்ற வளங்கள் உள்ளன. எமது நாட்டில் இத்தகைய வளங்கள் இல்லாது போனாலும் உயர்ந்த சிறந்த மனிதாபிமானங்கள் இருக்கின்றன.

தொடர்ந்தும் நாங்கள் வெளிநாட்டு உதவிகள் மூலம் வாழத் தயாராக இல்லை வரவு செலவுத் திட்டத்தினால் துண்டு விழும் தொகையை வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்று நிரப்பும் வழக்கத்தையும் நாம் கைவிட்டு விடுவோம். எமது சக்தியையும் சிரமத்தையும் செலவு செய்து முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் உறுதியோடும் இப்போது நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

இலங்கை வறுமை நாடல்ல எமது தனிநபர் ஆதாயம் 1350 அமெரிக்கன் டொலராகும்.

அமைச்சர் சமால்ராஜபக்ஷ

துறைமுகங்கள் விமானசேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஷ பேசும் போது,

`எமது உற்பத்திப் பொருட்களான மரக்கறி, பழவகைகள் 40 வீதமானவை விரயமாகின்றன. அந்த விரயத்தை சரி செய்து கொள்வது மிக முக்கியம்.

சிந்தித்துச் செயல்பட வேண்டும். அம்பாந்தோட்டை விரைவில் அபிவிருத்தி அடையும் பகுதியாக மாறும், துறைமுகம் வீரவில விமான நிலையம் நிறுவப்படுவதோடு இப்பிரதேசம் அபிவிருத்தி அடையும்' என்றும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com