Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
[16 - April - 2008] [Font Size - A - A - A]
சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பதை உறுதிசெய்வதும் சைவ சமய அனுஷ்டானங்கள், ஆசாரங்கள் மற்றும் விழுமியங்கள் பேணிப்பாதுகாக்கப்படுவதும் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பில் தான் முற்றாகத் தங்கியுள்ளது என்ற கருத்து திருகோணமலை ஆனந்தபுரி நாகசக்தி அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் சமயப் பெரியார்களினால் வலியுறுத்தப்பட்டது.

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்களினால் பொறுப்பேற்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் நாகசக்தி அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கு சம்பளம் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், மாணவர்களுக்கான சீருடை முதலியவற்றை தேவஸ்தானமே வழங்கிவருகின்றது. சீருடை வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அகில இலங்கை `சைவன்' நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி இதில் பிரதம அதிதியாகப் பங்குபற்றினார். ஆனந்தபுரி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருகோணமலை ஆலடி விநாயகராலய ஆதீனகர்த்தா ஷ்ரீலஷ்ரீ மு.சுந்தரலிங்க தேசிகர் வரவேற்புரையில்; சைவ சமயிகள் வழிதவறிப்போகக் கூடாது சைவம் சைவமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆதீனகர்த்தா இரவிச்சந்திரக் குருக்கள் தனது ஆசியுரையில் `அறநெறிப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு சைவ சமூகம் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவறாது அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வீடுகளில் சுவாமி அறையில் குழந்தைகள் தேவாரம் பாடக் கற்றுக்கொடுக்க வேண்டும். சமயம் சமயச் சார்பான விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.

பிரதம அதிதியான திருமதி ரமேஷ் விஜயலட்சுமி பேசும்போது; பெற்றோர் ஆசிரியர்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுதல் வேண்டும். போதிப்பதை விட்டு வாழ்ந்து காட்டுதல் மூலமே பெற்றோரும் ஆசிரியரும் இளஞ்சந்ததியினரின் உள்ளங்களில் அறநெறி விழுமியங்களை ஊன்றச் செய்ய முடியும்.

எம் பண்டைய பாரம்பரியங்கள், பண்பாட்டு விழுமியங்கள் அருகி வருகின்றன. இவற்றைப் பாதுகாத்து இளம் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். கல்வி ஒழுக்கத்தைப் போதிப்பதாக அமைய வேண்டும்; அகம்பாவத்தை அல்ல என்றும் திருமதி விஜயலட்சுமி கூறினார்.

காந்திப் பெரியார் பொ.கந்தையா பேசும்போது;

குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும். அக் காலத்தில் 100 இற்கு ஐந்து, பத்துப் பேர்தான் கூடாதவர்களாகக் காணப்பட்டனர். இன்று 100 இற்கு ஐந்து அல்லது பத்துப் பேர்தான் நல்லவர்களாகக் காணப்படுகின்றனர். மனிதன் புலால் உண்ணக்கூடாது. நாக்கு ருசிக்கு இன்று மனிதன் அடிமைப்பட்டு விட்டான். காய்கறி உண்பவனாக மனிதன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

தலைமையுரையில் சைவ சமய வளர்ச்சிக்காகச் செயற்படும் அமைப்புக்கள் தங்களுக்கிடையேயான முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சமயத்தையும் அதன் விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் பொது வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் செயற்பட வேண்டும் என்று சி.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். அலஸ்தோட்டம் மாதுமையம்பாள் வித்தியாலய அதிபர் திருமதி பரஞ்சோதி விமலாதேவி, திருமலை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் வேல்முருகு ஜீவராஜ், இலங்கை இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம், திருமலை இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் செ.விஜயசுந்தரம், வி.கருணானந்தசிவம் மற்றும் பலரும் பேசினர். அகில இலங்கை `சைவன்' நற்பணி மன்றப் பொதுச் செயலாளர் இ.நாகேந்திரராஜா நிகழ்ச்சிகளை நடத்தினார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com