Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
[16 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் , சாரதி , பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளுக்கு நிலவும் வெற்றிடத்துக்கான வாய்ப்பினை பெருந்தோட்டத்துறை இளைஞர், யுவதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்;

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உள்ளிட்டு ஆறு பாடங்களில் சித்தியடைந்த 5 அடி 4 அங்குல உயரமுள்ள 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கும் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்கள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் மேற்படி தகைமைகளுடன் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்று ஒரு வருடகால அனுபவமுள்ளவர்கள் பொலிஸ் சாரதிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமென்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தினை மலையக இளைஞர் , யுவதிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். மேற்படி பதவிகளுக்கு கோரப்பட்டிருக்கும் தகைமையுடையவர்கள் மலையகத்தில் கணிசமான தொகையினராக இருப்பதனால், எமது இளைஞர், யுவதிகள் முன்வந்து அதற்கான விண்ணப்பங்களை பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பியதன் பின்னர் அவற்றின் பிரதிகள் எனது கவனத்திற்கும் கொண்டு வரப்படும் பட்சத்தில் நியமனங்களுக்கான சிபார்சுகளை என்னால் வழங்க முடியும்.

பதுளை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினால் எமது சமூக இளைஞர், யுவதிகளை அரசின் பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக இப் பொலிஸ் சேவையிலும் எம்மவர்களை உள்வாங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மேற்படி பொலிஸ் திணைக்கள ஆட்சேர்ப்புகளினது நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளை, பண்டாரவளை ஆகிய இடங்களிலும் 25 ஆம் திகதி இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களிலும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி கண்டி, மாத்தளை ஆகிய இடங்களிலும் 23 ஆம் திகதி நுவரெலியா, அட்டன், வலப்பனை ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை அறிய விரும்பின் என்னுடன் நேரடியாகவோ, கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.0777-569299, 077-3696600, 011-2681481, 055-222-5580.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com