Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* கஜேந்திரன் எம்.பி.குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் சுயாட்சிப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே துப்பாக்கி முனையில் யாழ்.மக்கள் தொகைக் கணிப்பீட்டை இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

யாழ். மாவட்ட கச்சேரியினால் அண்மையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணிப்பீட்டின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இம் மக்கள் தொகைக் கணிப்பீடானது தற்போதைய போர்ச் சூழலில் அங்கு வாழும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாண்மை வாதிகளின் கபடத்தனமான அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி மக்கள் தொகை 6 இலட்சத்திற்கும் மேற்பட்டதாக உள்ளது.

யாழ்.குடாநாட்டில் உள்ள 40,000 இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைகள் போன்ற வன்முறைகளால் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யாழ். குடாநாட்டிலிருந்து படிப்படியாக வெளியேறி வன்னியிலும் தென்னிலங்கையிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர்.

அதனைவிட பல நூற்றுக்கணக்கானவர்கள் படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டிற்குள்ளே தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தகையதொரு நிலையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மக்கள் தொகைக் கணிப்பீடானது பாராளுமன்ற உறுப்பினர்கள், குடாநாட்டிலுள்ள அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள், பொதுமக்கள் ஆகியோரினது விருப்பத்திற்கு மாறாக அவர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.குடாநாட்டில் உள்ள கச்சேரி மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளும் கிராமசேவையாளர்களும் படையினரால் மிரட்டப்பட்டு பலவந்தமாகவே இந்த சனத்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கல்வி, பொருளாதார ரீதியாக ஒடு க்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இம் மக்கள் தொகைக் கணிப்பீட்டினால் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கும் ஏனைய உயர் கல்வி கற்கை நெறிகளுக்கும் மாணவர்களை அனுமதித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்தல், மாவட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்திற்கான அபிவிருத்த நிதி ஒதுக்கீடுகள், தொழில் வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றின்போது இம் மக்கள் தொகைக் கணிப்பீடு கவனத்தில் கொள்ளப்படுமாயின் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே, உயர் பாதுகாப்பு பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீள் குடியமர்த்துவதற்கு குடியிருப்பாளர்கள் நேரில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டுமென்ற நிபந்தனை காரணமாக மீள் குடியமர்வு என்பது சாத்தியமற்றதாகவே உள்ள நிலையில், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இம் மக்கள் தொகைக் கணிப்பீட்டினை வெளியீடு செய்ததன் மூலம் தமிழ் மக்களின் மக்கள் தொகை தொடர்பாக குறைந்தளவான புள்ளிவிபரங்களை வெளியீடு செய்தன் மூலம் சுயாட்சி கோரி போராடும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கு சிங்களத் தரப்பு மேற்கொள்ளும் சதி நடவடிக்கையாகவும் இதனை நாம் கருதுகின்றோம்.

ஜனநாயகத்திற்கு முரணான வகையில் துப்பாக்கி முனையில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மக்கள் தொகைக் கணிப்பீட்டினை அரசு உடனடியாக செல்லு படியற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதுடன் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் இந்த விடயத்தில் உரிய அக்கறை செலுத்தவேண்டுமென கோருவதாகவும் கஜேந்திரன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com