Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
[16 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பௌஸி கூறுகிறார்

ரொஷான் நாகலிங்கம்

தற்போதைய சூழ்நிலையில் இன்னும் சிறிது காலத்துக்கு எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டதென பெற்றோலிய பெற்றோலிய, வள அபிவிருத்தித்துறை அமைச்சர் ஏ.ஏச்.எம்.பௌஸி தெரிவித்தார்.

உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வுக்கு ஏற்ற வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கும் நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆராய்ந்து எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்ட ஈட்டு பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்க சிற்றி வங்கியுடன் மேற்கொண்டதை அறிவுக்கும் முகமாக இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

மக்களின் நலன் கருதி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றது. இவ்வாறான நட்டத்தை ஓரளவேனும் ஈடுசெய்வதற்காக மார்ச் மாத்தில் அமெரிக்க சிற்றி வங்கியுடன் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கூட்டுத்தாபனத்துக்கு 5.4 மில்லியன் இலாபம் ஏற்பட்டது.

இந்த உடன்படிக்கையின் சாதக பாதக தன்மையை ஆராய்ந்தே இதனை சிற்றி வங்கியுடன் மேற்கொண்டோம். நுகர்வோரின் நலன் கருதியே நாம் இதில் ஈடுபட்டோம். மேலும், நுகர்வோர் நன்மை பெறும் வகையில் கூட்டுத்தாபனம் தனது சுத்திகரிப்பு தொழில் துறை விரிவாக்கல் உட்பட பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இது மிக ஆபத்தான சூதாட்ட விளையாட்டு. இதில் நாம் வெற்றி பெற்றால் அமைதியாகவிருப்பார்கள். தோல்வியுற்றால் ஏன் இதில் ஈடுபட்டனர் என்று தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்களை மேற்கொள்வர். நாம் சிறியளவிலேயே சிற்றி வங்கியுடன் மேற்கொண்டோம். ஏனெனில் எமக்கு பாதகமாயினும் சிறிதளவிலேயே நாம் நட்டத்தை எதிர்நோக்குவோம் என்பதே இதற்குக் காரணமாகும்.

உலக சந்தையில் எண்ணெய் விலை 112 டொலரை எட்டியுள்ளது. உலக சந்தையில் அதிகரிப்பு ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

எண்ணெய் விலையதிகரித்தால் எரிபொருட்களின் விலையதிகரித்து பணவீக்கம் ஏற்படும். இதனால் அரசைக் கலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் அரசைப் பொறுப்பேற்பர். உலகில் ஜனநாயக அரசு இல்லாமல் போகின்றதை நாம் காணலாம்.

நாம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தால் பத்திரிகையில் கேலிச் சித்திரம் வரைகின்றனர். எண்ணெய் விலையை குறைப்பதற்காக நான் ஈரானுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளேன். அது போல் மிக விரைவில் ரோமில் உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையிலான பேச்சு என்னும் தலைப்பில் மிக விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு செல்லவுள்ளேன்.

இந்தக் கூட்டத்துக்கு ஒபெக் அமைப்பின் தலைவர் வருகை தரவுள்ள நிலையில், இலங்கை நுகர்வோர் என்ற நிலையில் எமது நிலைமையை அவரிடம் எடுத்துரைத்து இது தொடர்பில் இலங்கைக்கு உதவுமாறு நான் கோரவுள்ளேன்.

உலக சந்தையில் எண்ணெய் விலையதிகரித்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது நட்டத்தைத் தவிர்ப்பதற்காக கடந்த ஜனவரியில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியது.எனினும் இது வரை மக்கள் நலன் கருதி நிவாரணங்களை வழங்குவதால் 523 கோடி நட்டம் ஏற்பட்டது.

எனினும் இன்னும் சிறிது காலத்துக்கு எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான சாத்தியம் இல்லை. உலக சந்தையின் விலைகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகளை நுகர்வோருக்கும் கூட்டுத்தாபனத்துக்கும் பாதகம் ஏற்படாத வகையில் ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அமைச்சர் பௌஸி கூறினார்.

இந்நிகழ்வில் 5.4மில்லியன் தொகை காசோலையை சிற்றி பாங்கின் இலங்கைக்கான தலைவரும் உயர் நிறைவேற்று அதிகாரியுமான டெனிஷ் ஹஸி அமைச்சர் ஏ.ஏச்.எம்.பௌஸியிடம் கையளித்தார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com