Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 16, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
[16 - April - 2008] [Font Size - A - A - A]
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது கடந்த வருடம் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக நடைபெறும் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி 21 பேரடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்தபோது முகாமிலிருந்த விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டதாக ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

தாக்குதல் தொடங்கிய 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக் களஞ்சியத்தின் திறப்பை படையினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

ஐவரடங்கிய விசாரணைக் குழுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, ஏயார் வைஸ் மார்சல் ரவி அருந்தவநாதன், மேஜர் ஜெனரல் பீ.எல்.பெர்ணான்டோ மற்றும் கொமாண்டர் கே.ஏ.எஸ்.பெர்ணான்டோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தேநீர் இடைவேளையின்போது விடுதலைப் புலிகள் இந்த விமானப்படைத் தளத்திற்குள் புகுந்துள்ளதாகக் குறிப்பிடும் விசாரணைக் குழுவானது விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் முகாமின் மீது குண்டுகளை வீச வந்தபோது முகாமிலிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் விமானப்படைத் தளப் பிரதேசத்தில் வெடிச்சங்கள் கேட்டவுடனேயே கவச வாகனத்துடன் உடனடி தாக்குதல் அணியொன்று அங்கு விரைந்துள்ளது. அந்தக் குழுவை `கடேட்' அதிகாரியொருவர் வழிநடத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

குறைந்த பட்சம் அந்த வாகனத்தில் தகவல் பரிமாற்றக் கருவியொன்று கூட இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் அணிக்கு அனுபவம் வாய்ந்த அதிகாரியொருவர் இருக்கவேண்டியபோதிலும் அவ்வாறான ஒருவர் இருக்கவில்லை என்றும் அந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

விமானப்படைத் தளத்தின் 3 இடங்களில் இருந்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விட்டதால் விடுதலைப் புலிகளால் எம்.ஐ.-24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்த முடியுமாக இருந்ததாகவும் காவலுக்கு இருந்த அந்தப் படையினர் போதியளவு அனுபவம் உள்வர்களல்ல என்றும் அந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகளின் 3 குழுக்கள் வந்துள்ளதாகவும் மூன்றாவது குழுவானது தந்திரிமலையூடாக வன்னிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த ஐவரடங்கிய விசாரணைக் குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவானது விமானப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 18 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் அநுராதபுரம் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தபோது விமானிகளுக்கான அனுபவம் கொண்ட குரூப் கப்டன் ஒருவரே முகாமின் கட்டளையதிகாரியாக செயற்பட்டுள்ளார் என்றும் விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்க திரைப்பட விழாவில் `மை டோட்டர் த ரெரோரிஸ்ட்'
இலங்கை நெருக்கடியில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்கான பங்களிப்பை இந்தியா வழங்கும்
கெப்பிட்டிகொலாவவில் கிளைமோர் தாக்குதல் இரண்டு ஊர்காவல் படையினர் படுகாயம்
ஆற்றில் நீராடச் சென்ற ஐவரைக் காணவில்லை
வேலூர் சிறையில் நளினியை சந்தித்தார் பிரியங்கா காந்தி
வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் மன்னாருக்கு செல்ல அனுமதி மறுப்பு
மணலாறு மோதலில் 2 படையினர் 5 புலிகள் பலி, இருதரப்பிலும் 20 பேர் காயம்
பனிக்கன் குளத்தில் கடும் விமானத் தாக்குதல்
அடுத்த மாதம் மீண்டும் பால்மா, எரிபொருள் விலை அதிகரிக்கும்?
ஏப்ரல் 28 இல் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்
கிழக்கை முழுமையாக விடுவித்ததாக தம்பட்டமடிக்கும் அரசு பிரசாரத்தை மாலை 6 மணியுடன் நிறுத்துவது ஏன்?
புலிகள், படையினரின் சடலங்கள் பரிமாற்றம்
அமைச்சர் வீட்டின் முன்பாக நடமாடிய முன்னாள் இராணுவ வீரர் மாத்தறையில் கைது
சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவோர் குறித்து அவதானமாக செயற்பட வேண்டிய காலம்
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணனின் குரல்வளையை அறுத்துக் கொன்ற தங்கை
மலையகத்தில் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுக்கவென 500 ஊழியர்கள் நியமனம்
கிழக்குத் தேர்தல் பிரசாரத்தில் இனவாதத்தை முன்னெடுக்க சில தீயசக்திகள் முயற்சி
மாகாணசபை சட்டத்தை தூசிதட்டி மேசைக்கு கொண்டுவர 20 ஆண்டுகள்; சிங்கள அரசாங்கங்களை தமிழர்கள் நம்புவது எவ்விதம்?
மாணிக்க கங்கையில் குளித்த இளைஞன் மரணம்
பாராளுமன்றத்தினுள் மலர்வளையம் வைக்கப்பட்டது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதெனக் கேள்வி
ஈழப் போர் இதுவரை கண்டிராத யுத்தமுனை ஒன்றை வடபோரரங்கு விரைவில் காணப்போகிறது
நீதிமன்றக் கூண்டினுள் சந்தேகநபர் மரணம்
கட்டுக்கரை மோதலில் 2 படையினர் பலி
அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து ஐவர் கொண்ட விசாரணைக் குழு முன் புதிய தகவல்கள்
கடலில் குளிக்கச் சென்ற இளைஞனைக் காணவில்லை
உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக சில எம்.பி.க்கள் சர்வதேச பாராளுமன்ற குழுவிடம் முறைப்பாடு
முக்கிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு கூர்க்கா படையை அமர்த்த முயற்சி
சிறிது காலத்துக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது நுகர்வோரை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் தமிழ் இளைஞன் கடத்தப்பட்டார்
தமிழரின் சுயாட்சிப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் சதியே யாழ்.மக்கள் தொகை கணிப்பீட்டின் வெளியீடு
பொலிஸ் சேவை வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மலையக இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள்
மூன்று மாதங்களின் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தில் மீண்டும் பூஜை
திகாமடுல்ல மாவட்டத்தில் சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரம்
அம்பாறை மாவட்ட பிரதேச அபிவிருத்திக்கு துரித நடவடிக்கையெடுக்க விசேட ஏற்பாடு
ஜே.வி.பி.யின் பிளவுக்கு பின்னால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்
`சைவ சமயிகள் வழிதவறிச் செல்லாதிருப்பது அறநெறிப் பாடசாலைகளிலேயே தங்கியுள்ளது'
வவுனியா சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு
கற்றல் உபகரணங்களைப் பெற முடியாததால் தோட்டப்புற மாணவர்களின் கல்வி பாதிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக மாத்திரமே அரசு யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது
சேமிப்பு பழக்கமே நாட்டின் அபிவிருத்திக்கு அச்சாணி என்கிறார் உடுவில் பிரதேச செயலாளர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com