புலிகளின் இயக்கத்தினர் அணியும் யுத்தச் சீருடைகள் மற்றும் தொப்பிகள் ஆகியன தமிழ்நாட்டிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அண்மையில் தமிழ்நாடு பொலிஸார் இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் யுத்தச் சீருடைகள் தயாரிக்கும் ஆடைத் தொழிலகத்தை சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
மேற்படி யுத்தச் சீருடைகள் தயாரிக்கும் தொழிலகம் தமிழ்நாடு தென்பகுதி துறைமுகமாகிய ராமேஸ்வரத்தில் இயங்கிவந்துள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்திலேயே மேற்படி புலிகளின் ஆடைத் தொழிலகம் அமைந்திருந்ததாகவும் தகவல்களைத் தொடர்ந்து தமிழ்நாடு இராமேஸ்வரம் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த ஆடைத் தொழிலகத்தை திடீரென முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸார் முற்றுகையிட்டபோது அந்த ஆடைத் தொழிலகத்தில் பெருந்தொகையான ஆடை தயாரிக்கும் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்ததாக தமிழ்நாடு இராமேஸ்வரம் பொலிஸார் தரப்பில் பொலிஸ் பரிசோதகர் ஜீ.வேலுப்பிள்ளை தெரிவித்தார். அங்கு தயாரிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் சீருடைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவை புலிகள் இயக்கத்தினர் அணியும் யுத்தச் சீருடைகள் என்பதும் புலிகள் இயக்கத்துக்காகவே நெடுங்காலமாக அந்த ஆடைத் தொழிலகத்தில் யுத்தச் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.