பந்து திரும்பிச்செல்லும் விதமாக கான்பூரில் ஆடுகளம் வடிவமைத்திருந்த சிவகுமாருக்கு நன்றி தெரிவித்ததுடன், 10 ஆயிரம் ரூபா வெகுமதியளித்துள்ளார் இந்திய அணியின் தற்காலிக கப்டன் மகேந்திர சிங் தோனி.
கான்பூரில் இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமமானது.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மாதிரி கட்டாந்தரையாக இல்லாமல், கான்பூரில் பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான ஆடுகளத்தை அமைத்திருந்ததால் போட்டியில் முடிவு கிடைத்தது.
அதற்காக சிவகுமாரிடம் நன்றி தெரிவித்ததுடன், 10 ஆயிரம் ரூபா வெகுமதியளித்து ஊக்கப்படுத்தினார் தோனி.
இத்தகவலைத் தெரிவித்துள்ள சிவகுமார், தோனி இறங்கிவந்து ஊக்கப்படுத்தியது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.
காயம் காரணமாக அப் போட்டியில் விளையாடமுடியாமல் போன கப்டன் அனில் கும்பிளேயும், தொடர் நாயகன் விருந்தைப் பெற்ற ஹர்பஜன் சிங்கும் ஆட்டம் முடிந்ததும் நேரில் வந்து பாராட்டியதாக அவர் தெரிவித்தார்.
2 ஆவது இனிங்ஸில் 44 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்.