Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
உகண்டாவின் ஆரம்ப பாடசாலை தீ விபத்தில் 19 சிறுவர்களுட்பட 21 பேர் உடல் கருகிப்பலி
[17 - April - 2008] [Font Size - A - A - A]
உகண்டாவின் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்தொன்பது சிறுவர்கள் உட்பட 21 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.

தலைநகர் கம்பாலாவிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது பூடோ ஆரம்ப பாடசாலை இங்கு 7 முதல் 10 வயது வரையான சிறுவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள அறைகளில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் வெளிப்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

அப்போது தீ விபத்து ஏற்பட்டதில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் தீயில் கருகி இறந்தனர்.

அந்த அறைக்கு வெளியே மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என பாடசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

விஷமிகள் சிலர் இந்த வேலையைச் செய்திருக்கலாம். மின் கசிவால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது. அறையின் வெளிப்பக்கத்தை தாழிட்ட பின்னர் தீ வைத்திருக்கலாம்.

ஊதியம் வழங்காததைக் கண்டித்து பாடசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உலகம் வெப்பமாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க அமெரிக்கா மறுப்பு
உகண்டாவின் ஆரம்ப பாடசாலை தீ விபத்தில் 19 சிறுவர்களுட்பட 21 பேர் உடல் கருகிப்பலி
சீனா கடந்த ஆண்டில் எண்ணாயிரம் பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கலாமென அச்சம்
சிம்பாப்வேயில் எதிர்க்கட்சியினரின் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பு
ஒபாமாவை பாம்பு தைல வியாபாரியென வர்ணித்த எதிர்க்கட்சி எம்.பி. மன்னிப்பு கோரினார்
காத்மண்டு குண்டுவெடிப்பு குற்றவாளி நேபாளப் பொதுத் தேர்தலில் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com