* பிரதியமைச்சர் பாயிஸ் வாழ்த்துகிறார்
இம்முறை சாஹிரா தேசிய கல்லூரி ஆங்கில மொழி மூல க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் புத்தளம் கல்வி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.ீ இவ்வாறு கால்நடை வள பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் க.பொ.த. சா/த பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அண்மையில் வெளியாகிய க.பொ.த. சா/த பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் தடவையாக புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்கள் சிறப்பாக சித்தியடைந்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன். அத்துடன், ஆசிரியர்கள், அதிபருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தளம் மக்கள் கல்வி அபிவிருத்திகளை காண நீண்டகாலமாக ஏங்கிய ஏக்கம் இதன் மூலம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புத்தளம் மக்கள் தமது இழந்த அத்தனை உரிமைகளையும் அபிவிருத்திகளையும் கல்வியையும் ஒட்டுமொத்தமாக அனுபவிக்கும் காலம் மலர்ந்துவிட்டது. இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் 7 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 3 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.