Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
[17 - April - 2008] [Font Size - A - A - A]
"போர் மேகங்கள் சூழ்ந்து ஏக்கத்துடன் வாழ்கின்ற நிலையில் மக்கள் ஆன்மீக விசுவாச உறுதியுடன் வாழவேண்டும். மடுமாதா இன்று அகதியாகி விட்டாள். ஆனால், இந்நிலை நீடிக்கப் போவதில்லை. நிச்சயம் அன்னை தனது இருப்பிடத்துக்கு வந்து அருள்பாலிப்பாள் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம்"இவ்வாறு வண.பிதா யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அங்கிலிக்கன் திருச்சபையின் திருமலை புனித நிக்கலஸ் தேவாலய வைரவிழா நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை பிற்பகல் மேற்படி ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து,பௌத்த, இஸ்லாமிய மதத்தலைவர்கள், ரோமன் கத்தோலிக்க, மெதடிஸ்த மதகுருமார்களும் பங்குபற்றி ஆசியுரை நிகழ்த்தினர். நிகழ்வின் ஆரம்பத்தில் திருகோணமலை நீதிமன்ற வீதிச் சந்தியிலிருந்து அதிதிகள், மதகுருமார்கள் விசுவாசிகள் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பிரதம அதிதியாக அங்கிலிக்கன் திருச்சபையின் நுவரெலியா குரு முதல்வர் வண.பிதா தில்றோய் ரஞ்சித் கனகசபை பங்குபற்றினார். கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் இ.தியாகலிங்கம், பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன், மிகுந்துபுர பௌத்த விகாரை அதிபதி மகிந்த வங்ஸதேரர், உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய பிரதம குரு ஷ்ரீதரன் குருக்கள், மௌலவி ஹதிபத்துல்லா ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.

பௌத்த மதகுரு மகிந்த வங்ஸதேரர் ஆசியுரையில், அனைத்து மதங்களும் அன்பு, கருணை ஆகியவற்றையே போதிக்கின்றன. புரிந்துணர்வுடன் மதங்கள் செயற்படவேண்டும். அது நிரந்தர அமைதிக்கு வழிசமைக்கும் என்றார். அனைத்து இன,மதங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபடும் திருமலை புனித நிக்கலஸ் தேவாலயம் கடல்கோள் அனர்த்தத்தின்போது ஆற்றிய பணியை மௌலவி ஹதியத்துல்லா தனது ஆசியுரையில் நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தில் சலாம், சிங்களத்தில் சாம, தமிழில் சாந்தி ஆகிய வார்த்தைகள் எல்லாம் சமாதானத்தையே வலியுறுத்துகின்றன. இதனை அனைத்துத் தரப்பினரும் மனதிற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். துர்க்கையம்மன் ஆலயக் குருக்கள் பேசும்போது; இறைவன் வேற்றுமை, பேதம் காட்டுவதை எந்தச் சமயமும் போதிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

நுவரெலியா குருமுதல்வர் அருட்தந்தை தில்றோய் கனகசபை பேசும்போது; "உங்கள் யாத்திரையில் உங்களோடு பயணித்த கடவுள் தொடர்ந்தும் நீங்கள் உண்மைக்காக, நீதிக்காக, நியாயத்துக்காக எழுந்து நிற்பதற்கும் உயிர்வாழும் கிறிஸ்துவோடு புதுப்பிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து பணிசெய்ய உங்களை ஆயத்தப்படுத்துவாராக" என்று குறிப்பிட்டார். பிரதேச குருவானவர் சந்திரன் கிறிஸ்பஸ் வைரவிழாவின் முதலாவது பிரதியை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஹெரல்ட் சிறிதரனுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். தமிழ், சிங்கள கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. மகளிர் சங்கத்தின் குழுவினரால் புனித நிக்கலஸ் தேவாலய வரலாறு பற்றிய வில்லுப்பாட்டுக் கச்சேரி நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் நுவரெலியா குரு முதல்வர் வண. பிதா தியோரிஸ் ரஞ்சித் கனகசபை, ஆலயவளவில் முதியோருக்கான பொழுதுபோக்கு அறையைத் திறந்து வைத்து ஆசிர்வதித்தார்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com