உடவளவை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்த நீர்த் தேக்கத்தில் யாரும் நீராட செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழமையை விட நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் 2 வான் கதவுகள் நேற்று புதன்கிழமை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத் திட்ட பொறியியலாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
கடந்த காலங்களில் இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாகவே இந்த நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மேலும் பல வான் கதவுகள் திறக்கப்படுமெனவும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.