கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை ஆதரித்து பெண்களுக்கான பிரசாரக் கூட்டங்கள் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் புதிய காத்தான்குடி தக்வா நகரிலும் மத்திய வீதியிலும் இக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த தேர்தல் பிரசார கருத்தரங்குகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டதுடன், அதிபர் எம்.ஏ.சி.எம். பதுர்தீன், அதிபர் ஏ.பி.எம்.றசூல், ஆசிரியர் எம். பாக்கீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ஹிஸ்புல்லாஹ்வை ஏன்? முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்ற விளக்கஉரையினை நிகழ்த்தினர்.
வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் கலந்துகொண்டு, முஸ்லிம்கள் ஒருமித்து வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.