அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே அரசியலில் நுழையும் பட்சத்தில் அவரை மேல் மாகாண சுகாதார அமைச்சராக்க தான் தயாராயிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.
கம்பஹாவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் அவரது மனைவியான டாக்டர் சுதர்ஷினியை அரசியலில் நுழையுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் சுதர்ஷினி அரசியலில் நுழைந்தால் அவரை கட்டானை தொகுதி அமைப்பாளராக நியமிக்கவும் அவர் தீவிர அரசியலில் நுழைந்தால் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இடத்திற்கு எம்.பி.யாக நியமிக்கப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் டுலிப் விஜயசேகராவின் இடத்திற்கு நியமித்து அதன்மூலம் அவரை மேல் மாகாண சுகாதார அமைச்சராக நியமிக்கவும் ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும், டாக்டர் சுதர்ஷினியின் முடிவுக்காக ஜனாதிபதி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.