Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 17, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
[17 - April - 2008] [Font Size - A - A - A]
தெனியாய- அடதெனியா நீர்வீழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் நேற்று புதன்கிழமை பகல் ஜின் கங்கையில் சடலமாக மிதக்கக் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த இளைஞர்களில் ஒருவர் காலி- தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் என்றும் ஏனைய நால்வரும் தெனியாய தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்கள் எனவும் தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.பி.பிரியந்த தெரிவித்தார்.

இவர்கள் மதுபோதையில் வந்து நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திடீரென காணாமல்போன இவர்களை இரவு முழுவதும் அப்பகுதி எங்கும் உறவினர்கள் தேடியுள்ளனர்.

நேற்று பகல் இவர்களின் சடலங்கள் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் ஜின் கங்கையில் மிதந்து வந்ததைக் கண்டவர்கள் தெனியாய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலங்கள் தெனியாய ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ரபீக் பாரூ (24 வயது) , எஸ்.சசிகுமார் (24 வயது), எஸ்.பாலசுப்பிரமணியம் (24 வயது) , எஸ்.இராமகிருஷ்ணன் (24 வயது) எஸ்.தம்பிராஜா (24 வயது) ஆகிய இவர்களின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டன.

தெனியாய தோட்டப்பகுதியில் இச்சம்பவத்தையடுத்து வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அப்பகுதி சோகமயமாகக் காணப்படுகிறது.

கண்டியில்

இதேவேளை, கண்டி- கட்டுகஸ்தோட்டப் பகுதியில் மகாவலி கங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குளித்துக் கொண்டிருந்தபோது நீரினால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கமளிக்க பகவதி குழு ஏற்பாடு
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காணாமல்போன ஐந்து இளைஞர்களும் சடலங்களாக மீட்பு
யுத்தத்திலும் பார்க்க பொருட்கள் விலை அதிகரிப்பால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு
செவ்வாய் நள்ளிரவும் நேற்றும் வடக்கில் கடும் விமானத் தாக்குதல்
ஜெயராஜின் மனைவியை அரசியலுக்குள் இழுக்க ஆளும்தரப்பு தீவிர முயற்சி?
நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலை விசேட வர்த்தமானி மூலம் அரசு அறிவிப்பு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரம் முஸ்லிம் பகுதிகளில் சூடுபிடிப்பு
வவுனியாவில் கொள்ளைக் கோஷ்டியை மடக்கிப் பிடித்தனர் விழிப்புக் குழுவினர்
`இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் மீண்டும் நல்லிணக்கத்துக்கு பிரியங்கா - நளினி சந்திப்பு உதவக்கூடும்'
மணலாறு மோதலில் 2 படையினர் பலி
ராஜீவ் படுகொலைதொடர்பாக பிரியங்காவிடம் சந்தேகம்?
தமிழர்களை பிரஜைகளாக ஏற்றுக் கொண்டால் பாதுகாப்பு கெடுபிடிகளை உடன்தளர்த்த வேண்டும்
கிழக்கு மாகாணத்தை விடுவித்த ஜனாதிபதிக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
கிழக்கில் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு நீராட செல்ல வேண்டாமென அறிவிப்பு
`அகதியாகியிருக்கும் மடுமாதா இருப்பிடம் வந்து அருள் தருவார்'
ரவிராஜ் கொலை வழக்கு ஏப்ரல் 23 இல் விசாரணை
வாகன விபத்தில் இளைஞர் பலி
ஸ்லோவாக்கியாவின் ஆயுத உதவிக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவிப்பு
வெள்ளை வானில் வந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டவர் காணாமல் போனதாக பிரதியமைச்சரிடம் புகார்
சிறைக் கைதி சுட்டுக் கொலை
மோசமான இரு குற்றவாளிகள் அம்பலாங்கொடையில் சுட்டுக்கொலை
பாலஸ்தீன ஜனாதிபதி விரைவில் இலங்கை விஜயம்
பஸ் ஆற்றில் பாய்ந்ததில் 44 மாணவர்கள் பலி
ஏப்ரல் 21 முதல் தேர்தல் பிரசாரத்தை பாரியளவில் முன்னெடுக்க மு.கா. தீர்மானம்
புத்தல வீதியூடாக போக்குவரவு ஆரம்பம்
அணிசாராமல் செயற்படும் தென்பகுதி ஜே.வி.பி.யினர்
402 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் மலையகக் கல்வி வரலாற்றில் முக்கிய நிகழ்வு
இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
ஆங்கில மொழிமூல மாணவர்களின் பெறுபேறுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை
ஜே.வி.பி.யின் தாளத்துக்கு ஆட பொலிஸ் திணைக்களம் தயாராக இல்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com