பாக்தாத்: ஈராக்கில் மரணச் சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலியானதுடன் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.
வடபகுதி நகரான பகுவாவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
ஈராக்கிலுள்ள அல்-ஹைய்தா போராளிகளுடனான மோதலின் போது பலியான உள்ளூர் போராளிக்குழு உறுப்பினர்களின் மரணச் சடங்கு நிகழ்விலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு இவ்வார முற்பகுதியிலிருந்து அதிகளவான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகளவானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.