Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
[18 - April - 2008] [Font Size - A - A - A]
*செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ்

யோ.நிமல்ராஜ்

இலங்கையின் பாரிய பொருளாதார அபி விருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சீனாவுக்கான விஜயமானது இரு நாடுகளின் இருதரப்பு நட்புறவுகளை ஆழமாகப் பேணுவதுடன், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளது.

மேலும், இலங்கையின் பாரியளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகளவிலான நிதி உதவிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ முன்வந்துள்ளார்.

அத்துடன், சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அங்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீன அரசின் உதவியின் கீழ் இலங்கையில் மிகப்பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொருளாதார விடயத்தில் பெருமளவான உதவி சீன அரசின் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ சீனாவும் இலங்கையும் ஒரே மாதிரியான கொள்கையை கடைப்பிடிக்கும் நாடுகளென்று தெரிவித்தார்.

புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலைய அபிவிருத்தி திட்டத்துக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் தேசிய அரங்கக்கலைக்கான கலையரங்கம் அமைப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலரும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 307 மில்லியன் அமெரிக்க டொலரும் மற்றும் கிரிபத்கொட - கடவத்தை நெடுஞ்சாலை, நுகேகொட மேம்பாலம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கும் சீன அரசின் அத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேகச் சாலை நிர்மாணத்திற்கு 292 மில்லியன் அமெரிக்க டொலரும் அம்பாந்தோட்டை எண்ணெய் ஆலையின் அபிவிருத்திக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேயிலை ஏற்றுமதி, இரத்தினக்கல் வணிகம் தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியதுடன், இலங்கையின் இறப்பர் அபிவிருத்திக்கும் சீன அரசு நிதி உதவியளிப்பதாக உறுதியளித்துள்ளது.

மேலும், இச்சந்திப்பின் போது தன்சானியா ஜனாதிபதி, சிலி ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பும் நான்கு பாராளுமன்ற உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலியுடன் மீன் ஏற்றுமதி தொடர்பாக பேச்சுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான இச்சந்திப்பு பூரண வெற்றியளித்திருப்பதாக" பேராசிரியர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com