Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
[18 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவானது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டலுக்கமைய செயற்பட வில்லையென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை விசனம் தெரிவித்திருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மனித உரிமைமீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் குழுவினர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமையவே செயற்பட்டிருக்க வேண்டுமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று வியாழக் கிழமை காலை கூறினார்.

செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் வெளியிட்ட உணர்சிவசப்பட்ட கருத்துகளை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியதாவது:

சர்வதேச சுயாதீன முன்னணி புத்திஜீவிகள் குழு ஜனாதிபதியின் அழைப்பின் மீதே இங்கு வந்தனர். விசாரணைகளின் போது அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருந்தது. சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் அவற்றை ஜனாதிபதியுடன் அல்லது சட்டமா அதிபருடனேயே பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கு அரசுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

அந்தக்குழு செயற்படுவதற்குரிய அதிகார வரம்பிற்கு வெளியே வந்து கருத்துகளை வெளியிட முனைவது நேர்மையானதாகக் கருதமுடியாது. எமது நாட்டுக்கென நீதிச் சட்டம் ஒன்று உள்ளது. அதனைப்புறக்கணித்து எம்மால் எதனையும் செய்ய முடியாது. அதனை வழிநடத்துவதற்காகவே சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை நிராகரிக்க முடியாது.

வெளியுலகுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக பார்வையைக்காட்டுவதற்கானதொரு மனம் வருந்தக் கூடிய அறிக்கையாகவே குழுவின் அறிக்கையை நாம் கருதுகின்றோம். இந்த அறிக்கையை விடுவதற்கு முன்னர் குழு ஜனாதிபதியிடமோ, சட்டமா அதிபரிடமோ கலந்துரையாடியிருக்கலாம் அதைச் செய்யாது அரசு மீது குற்றச்சாட்டு சுமத்த முற்படுவது எந்தவகையில் நியாயமானது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார்.

Email this page Your Opinion Print this page
அதிகார வரம்பை மீறி பகவதிகுழு செயற்பாடு; அரசு கடும் குற்றச்சாட்டு
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றம் நீதி, மனித உரிமைகள் மீதான `இரங்கற்பா'
யாழ்நகரில் 2 இளைஞர் சுட்டுக்கொலை
விமானக் குண்டு வீச்சில் மாணவி பலி இளைஞன் காயத்துடன் ஆஸ்பத்திரியில்
சர்வதேச குடியியல், அரசியல் உரிமை சாசனத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஐ.தே.க.ஆதரவளிக்கும்
புலிகள் ஆயுதங்களை கைவிடும்வரை அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லாது
நீர்க் கட்டணம் 15 % அதிகரிப்பு
வடபகுதி ஆஸ்பத்திரிகளில் மருந்து வகைகள் மருத்துவ ஊழியருக்கு பெரும் தட்டுப்பாடு
மணலாறு மண்கிண்டி மலைப் பகுதியில் முன்னேற இராணுவம் தீவிர முயற்சி
விசுவமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
17 நாட்கள் நடந்த மோதல்களில் 34 படையினர் பலி; 236 பேர் காயம்
போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் திரைப்படங்களை பயன்படுத்த அரசு முயற்சி
திடீர் விபத்து சேவைப்பிரிவு தாதியர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர் கைது
அமைச்சர் ஜெயராஜ் படுகொலை தொடர்பான தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது
சிறப்பு பயிற்சி பெற்ற 80 புலிகள் தென் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்
நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்களும் விடுதலை
மாகாணசபை முன்னாள் உறுப்பினரின் மரணச் சடங்கில் பங்கேற்ற தமிழ்ப் பெண் கைது
வைகோ புலிகளின் பேச்சாளரென்பது அறிந்த விடயம் என்கிறார் ஹெகலிய
இலங்கைக்கு இரும்புக் குழாய்கள் கடத்த முயன்ற 6 பேர் கைது
வசந்தகால நிகழ்வுகளால் களை கட்டும் நுவரெலியா ஹோட்டல், வீடுகளின் கட்டணங்களும் உயர்வு
கடவுச்சீட்டில் மோசடி நால்வருக்கு பிணை
மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த கிராம பாதுகாப்பு வீரர்
வலுவிழந்தோருக்கு உபகரணங்கள் புதிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு
கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞன் கைது
கதிர்காமத்திற்கு மீண்டும் அதிகளவு பக்தர்கள்
`வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்காதுவிட்டால் பல கோடி ரூபா அபிவிருத்தி திட்டங்களை இழப்போம்'
கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் வார இறுதியில் ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற நினைக்கும் திட்டத்தை முறியடிப்போம்
10 ரூபா விலைக்கழிவில் 10 கிலோ அரிசிக்கு கூப்பன் வழங்குவது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டம்
யாழ். அரச அதிபருக்கு உத்தியோகபூர்வ இல்லம்
வடமராட்சிப் பகுதியில் நடமாடும் பொலிஸ் சேவை
அப்புத்தளை பெரகலை, கொஸ்லந்த பகுதிகளூடாக பயணம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடமைகளில் ஈடுபட 6500 உத்தியோகத்தர்கள் நியமனம்
மாலைதீவு பிரஜைகளுக்கு விளக்கமறியல்
ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
துவக்கு சூட்டில் இளைஞன் காயம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா பாரிய தொகை நிதி உதவி
நரிமலை இராணுவ மைதானத்தில் நாளை கார் பந்தயம்
உசன் பகுதியில் வீட்டின் மீது ஷெல் வீழ்ந்து வெடித்ததில் பெண் காயம்
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்து சோனியாவுக்கு சந்திரசேகரன் கடிதம்
மீனவரை காணவில்லை
பஸ்,ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த அமைச்சர் டலஸ் உறுதியளிப்பு
`மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களின் வாழ்வில் சுபிட்சத்தை மக்கள் வங்கி ஏற்படுத்துகிறது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com