கொல்கத்தா மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக இருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் 55 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ரசிகர்களின் அமோக வரவேற்பை பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிடுமென எதிர்பார்க்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.