Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு

கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளில், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உட்பட 2500க்கும் அதிகமான பணியாளர்களை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்போவதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் மே பத்தாம் திகதி நடைபெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பவ்ரல் அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்காக பவ்ரல் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதற்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தலா ஒவ்வொரு இணைப்பு அலுவலகங்களும் அம்பாறையில் இரு இணைப்பு அலுவலகங்களும் ஸ்தாபிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை பவ்ரல் மேற்கொண்டுள்ளது.

தேர்தலின் போது நடைபெறும் வன்முறைகள், மோசடிகள் போன்றவற்றின் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே இவ் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

அந்த முறைப்பாடுகளின் முக்கியத்துவத்தை பொறுத்து அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட உயர் அமைப்புகள் மேற்கொள்ளும்.

அத்துடன், சர்வதேச கண்காணிப்பாளர்களின் மூன்று நடமாடும் குழுக்கள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குழு வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவர்களுடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மேலதிகமாக ஒவ்வொரு குழுவிற்கும் தலா 20 பேர் கொண்ட குழு இணைக்கப்படவுள்ளதெனத் தெரிவித்தார்.

கிழக்கிலுள்ள 1022 வாக்குச்சாவடிகளில் தலா இருவர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக 2500 உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்துடன், இதற்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, குறிப்பிட்டதொரு தேர்தல் தொகுதியின் கண்காணிப்பு பணிகளுக்காக அப்பகுதியின் மதகுருமார்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட விசேட நடமாடும் குழுக்கள் இரண்டு ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேலும் சில வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கும் தேர்தல் ஆணையகம் முயற்சி எடுத்துள்ளது.

இருந்தாலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் தேர்தல் ஆணையாளரால் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மாகாணசபைத் தேர்தலின் தபால் மூலவாக்களிப்புகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் குறிக்கப்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளன.

தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்புகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4427 பேரும் அம்பாறையிலிருந்து 9468 பேரும் திருகோணமலையிலிருந்து 8517 பேரும் அடங்கலாக மொத்தமாக 22,412 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஏனைய 982,721 பேருக்குரிய வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதுடன், அவை விநியோகம் செய்து முடிப்பதற்கான இறுதித் திகதி மே இரண்டெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com