Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
[19 - April - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மாகாண சபைக்காக நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தமிழ், முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு அது செய்துள்ள மாபெரும் துரோகமாகும்.

இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான எம்.எம்.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பத்திரிகைளுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கல்முனைத் தொகுதி மக்கள் நீண்டகாலமாக ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜயதுங்க தொடக்கம் ரணில் விக்கிரம சிங்க வரையுள்ள காலங்களில் இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ.தே.க. கட்சியை பெரும்பான்மையாக ஆதரித்து வந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் ஐ.தே.கட்சியில் அமைச்சராக இருந்து அம்பாறை மாவட்ட கரையோர தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுத்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுடன் நேரடியாக ஐ.தே.கட்சி போட்டியிட்டு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் நிந்தவூர் பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபைகளை கைப்பற்றியதுடன் கல்முனை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட 19 வேட்பாளர்களில் 8 உறுப்பினர்களை ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் வாக்களித்து வலுவான உறுதிப்பாடான ஒரு எதிர்க்கட்சியாக தெரிவு செய்த வரலாற்று உண்மையை ஐ.தே.கட்சியின் தலைமை உயர்பீட உறுப்பினர்கள் எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

கல்முனை பிரதேச சபையில் எதிரணித் தலைவராக நான் இருந்து ஐ.தே.கட்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்த பணிகளையும் பங்களிப்புகளையும் ஐ.தே.கட்சி தலைமையும், உயர்பீடமும் மறக்க முடியாது. இதுபோன்றே ஐ.தே.கட்சியின் மீது தமிழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்து நடந்துவந்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் தலைமையை ஏற்ற காலம் முதல் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை ரவூப் ஹக்கீம் பொறுப்பெடுத்த காலம் தொடக்கம் முஸ்லிம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளுக்கு ஐ.தே.கட்சி தலைமை மயங்கி நீண்டகாலம் கட்சிக்காக உழைத்த ஐ.தே.கட்சி உறுப்பினர்களை படிப்படியாக காலத்துக்குக் காலம் இழந்து வந்த வரலாறுகளும் கவலைக்குரிய விடயமாகும்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் வேட்பாளராக போட்டியிட கட்சியின் தலைமைத்துவத்தாலும் உயர்பீட உறுப்பினர்களாலும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் கல்முனை அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட ஐ.தே.கட்சியின் செயலாளரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான என்னை இறுதி நேரத்தில் ஷ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் சதித்திட்டத்தினால் போட்டியிட முடியாமல் கட்சி தடைசெய்தது. ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும்.

நான் முன்னாள் அமைச்சர் மன்சூர் காலம் தொடக்கம் 1994 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி தெரிவான வரை கட்சிக்காக பெரும் பாடுபட்டு வந்ததை ஐ.தே.கட்சி தலைவர் தொடக்கம் ஆதரவாளர்கள் வரை அறிவர். இப்படிப்பட்ட என்னை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வலிமை ரவூப் ஹக்கீமுக்கு இருக்குமானால் ஐ.தே.கட்சியின் தலைமை ஷ்ரீலங்கா மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அடிமைப்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் ஆதரவாளர்கள் மத்தியில் வலுவாக ஏற்பட்டுவிட்டது என கல்முனைப் பிரதேச ஐ.தே.க. தமிழ் முஸ்லிம் ஆதாவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com