Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* தமிழர் அரசுக்கே வாக்களிப்பர் என்கிறார் பிரதியமைச்சர் நிஜாமுதீன்

நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களால் ஐ.தே.கட்சிக்கு போடப்படும் வாக்குகளால் ஐ.தே.கட்சி பலம் பெறுமே தவிர மாகாண சபை ஆட்சியை கைப்பற்ற முடியாதென கல்முனை சமூக முற்போக்கு முன்னணி ஒழுங்கு செய்திருந்த விதவைகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் கல்முனைக்கான இணைப்பாளர் ஏ.எம்.ஏ.ஜஸீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"1988 ஆம் ஆண்டு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிமுகமாகி மரச் சின்னத்துடன் வந்து யானையை கிழக்கு மாகாணத்தை விட்டு துரத்திய வரலாற்றை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய மரத்தைத் தொலைத்து விட்டு யானைச் சின்னத்துடன் வலம் வருவதனை எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களாலும் அனுமதிக்க முடியாது.

எங்களுடைய குறிக்கோள் எல்லாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வர வேண்டும் என்பதுதான். அதற்காக சகல முஸ்லிம்களும் அரசாங்கக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இதைத் தவிர அவர் வருவார், இவர் வருவார் என்பது வெறும் வாக்கு ஜாலமே ஒழிய நடக்காத விடயமாகும்.

ஏனென்றால் தற்போது இருக்கின்ற அமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற மொத்த முஸ்லிம் வாக்குகளும் ஐ.தே.கட்சிக்கு கிடைத்தாலும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. தமிழ் வாக்குகளும் சிங்கள வாக்குகளும் அரசாங்கக் கட்சிக்கே கிடைக்கும். எனவே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் அரசாங்கக் கட்சியை ஆதரித்தால் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதனை எவராலும் தடுக்க முடியாது.

இந்தச் சமயத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் சமூகம் இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே என்ன செய்ய வேண்டும் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து வாக்களிப்பதற்குத் தயாராக வேண்டும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com