Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* மாத்தளை மாநகர சபை ஐ.தே.க. உறுப்பினர்

பொருளாதாரச் சுமையாலும் யுத்த சூழ்நிலையாலும் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களை மீட்டெடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ள ஷ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நாட்டு மக்கள் அனைவருமே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளனர் என மாத்தளை மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் ரோசான் டி சில்வா தெரிவித்தார். கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் மாத்தளை மாநகர பிதா முகமது ஹில்மி கறீமின் தலைமையில் நகர சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது;

"அதிகரித்துவரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இவ்வருடம் தமிழ், சிங்கள மக்கள் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட முடியாமல் திண்டாடுகின்றனர். ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சர்களோ அதனையிட்டு எள்ளளவும் கவலைப்படாது செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புவைத்துக் கொண்டுள்ள பொ.ஐ.முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் எதிர்நோக்கி வரும் பாதிப்புக்களை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

கடந்த வருட டிசம்பர் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மலர் வளையம் வைக்கப்பட்டதையடுத்தே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அன்றைய தினம் முதல் இன்று வரை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமாக 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் புத்திஜீவிகள் பலரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். எனவே, இந்த படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

எதிர்க் கட்சி தலைவர் டல்ஜித் அலிவிகார பேசும்போது;

"நான் இச்சபைக்கு வந்த நாள் முதற்கொண்டு இச்சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செயலுரு பெற வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கட்டாயம் செயலுருப்பெற வேண்டும். அண்மையில் சட்டவிரோத பெயர் பலகைகள் அகற்றப்பட்ட போது ஐ.தே.க.வின் ஆதரவாளர்களான வர்த்தகப் பிரமுகர்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சகலருக்கும் சமமாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோன்று புதிய பொதுச் சந்திக் கட்டிடம் இ.போ.ச. பஸ் தரிப்பிடம், முச்சக்கரவண்டி சாரதிகள், நடைபாதை வர்த்தகர்கள் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. நகர பிதாவின் அதிகாரத்தை வேறு சிலர் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். நகர சபைக்கு சொந்தமான வளங்களும் சூறையாடப்படுவதுடன் வேறுசிலரால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இவ்விடயங்களின் நகர பிதா கூடிய கவனம் எடுக்கவேண்டும்" என்றார்.

ஜே.வி.பி. நகர சபை உறுப்பினர் ய.பண்டாரநாயக்க பேசும்போது;

"எமது கட்சியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கட்சியின் நிர்வாக சபையால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது உண்மை. எமது கட்சி மிகவும் கட்டுக்கோப்பான கட்சியாகும். எந்தவொரு உயர்பதவி வகிப்பவரானாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக நடக்கும்போது அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விமல் வீரவன்ச தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானம் ஊடகங்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். 1978 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டை ஆட்சி செய்தவர்களின் துஷ்பிரயோகங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமை, இலஞ்சம், ஊழல், வீண் விரயம் போன்றவற்றின் காரணமாகவே இன்று வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது. இதற்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினரை மட்டும் குறை கூற முடியாது. நாட்டை ஆட்சி செய்த அனைவருமே இதற்கான பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்" என்றார்.

பொ.ஐ.மு. உறுப்பினர் ரோகன குமார ஹெட்டிபொல பேசும்போது;

"கடந்த 7 மாதமாக மூடப்பட்டு கிடக்கும் எமது வாடிவீடு திறக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடே மூல காரணமாகும். அது இல்லாதிருக்குமானால் இதனை ஏற்கனவே திறந்திருக்க முடியும். இந்த வாடிவீடு மூடப்பட்டுள்ளதால் நகர சபைக்கு மாதாந்தம் கிடைத்த பல லட்சம் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளது" என்றார். உறுப்பினர்கள் பலரும் உரையாற்றிய பின் நகர பிதா முகமது ஹில்மி கரீம் பதிலுரையாற்றியபோது;

"சில நகர சபை உறுப்பினர்கள் நகர சபைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு உரையாற்றுகின்றார்கள். இது வருந்தத்தக்கதாகும். மக்களுக்கு சேவையாற்றவே நாம் அனைவரும் இச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அனைவரும் கட்சி பேதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தனிமனித கோபதாபங்களையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு கருத்தொருமித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். இதைப்போன்று நகர அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் போதும் உறுப்பினர்கள் அனைவரும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்றார். இக்கூட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவுக்கு அனுதாபத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com