Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* ம.ம.மு.செயலாளர் நாயகம்

மீனுக்கு வாலையும் பாம்பிற்கு தலையையும் காட்ட வேண்டிய நிலையிலேயே பல மலையக தொழிற்சங்கவாதிகள் வாழ்கை நடத்துகின்றார்கள் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன் தெரிவித்தார்.

அப்கொட் பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

"இன்று மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களில் அல்லது சமூகசேவைகளில் தங்களை அக்கறையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் ஏதோவொரு வகையில் அரசாங்கத்துடனோ அல்லது ஜனாதிபதியுடனோ உறவுகளைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஆனால், எடுத்ததெற்கெல்லாம் மலையக மக்கள் முன்னணியையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் விமர்சிப்பதை மட்டுமே இவ்வாறானவர்கள் தமது சமூக அறிவாக குறைத்து மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாடசாலைக்கு செல்லும் காலங்களிலேயே அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் இன்னும் புலம்பிக்கொண்டிருப்பதோடு ஒரு தெளிவான கொள்கையில்லாமலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ அல்லது மாகாணசபை அங்கத்தவர்களாகவோ இருப்பவர்களை விடவும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவருக்கு செல்வாக்கும் அதிகாரமும் அதிகம். ஆனால், இவர்களும் இன்று ஒப்பாரியிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. வங்கி புத்தகத்தை வைத்துக்கொண்டு எத்தனை காலம் தான் தொழிற்சங்கம் செய்யப்போகின்றார்களோ தெரியாது.

கடந்த காலங்களை விடவும் அரசவளங்களை எமது மக்களுக்கும் கொண்டுசெல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில் மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் அரசாங்க சார்பாக மாறியுள்ளதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது மக்களுக்குச் செய்யக்கூடிய ஆகக்கூடிய அபிவிருத்திகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.

எமது சமூகத்திற்குரிய ஏனைய அரசியல் உரிமைகளை மலையக மக்கள் முன்னணி வென்றெடுத்துக்கொடுக்கும்" எனத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com