Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* ஆனந்த சங்கரி

வன்னிப் பகுதியில் விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் இரவுநேர தாக்குதல்களை நிறுத்தக்கோரி, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இரவுநேர தாக்குதல்களால் மக்கள் எதிர்கொண்டுள்ள அவலங்கள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இரவுநேர தாக்குதல்களின்போது அப்பாவி மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் இத்தாக்குதல்களின் போது வீணே கொல்லப்படுகின்றனர்.

பகல் வேளைகளிலேயே இவ்வாறான தாக்குதல்களில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள முடியாது மரணிக்க வேண்டி ஏற்படுகின்ற இக்கட்டான நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தேறியிருப்பதை தாங்கள் அறிவீர்கள்.

சாதாரணமாக தாக்குதலில் ஈடுபடும் ஜெட் விமானங்கள் வானத்தில் பறக்கும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களும் பெண்களும் அந்த அதிர்வொலியால் காதை அடைத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

ஏற்கனவே, பல தடவைகள், வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் தங்களிடம் கோரியுள்ளேன்.

அப்பகுதியில் வாழும் மக்களால் இனியும் விடுதலைப் புலிகளின் அக்கிரமங்களைப் பொறுக்க முடியாது. யுத்தமுனையில் தம்பிள்ளைகளில் நூற்றுக்கணக்கானவர்களை இனியும் அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. தம் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்பேற்படாது தம்மை விடுவிக்கும் ஓர் நட்புறவுடன் செயற்படக்கூடிய இராணுவத்தை அவர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களிடம் இத்தகைய ஓர் வேண்டுகோளை நான் முன்பு ஒருமுறை விடுத்திருந்தேன்.

இராணுவ நடவடிக்கையால் ஒரு அப்பாவி உயிர் தன்னும் இழக்கப்படக் கூடாது. இந்த நிலைப்பாடே தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டை எமக்குத் தாருங்கள். கட்டுநாயக்க விமான நிலையம் புலிகளால் தாக்கப்பட்ட போது கொழும்பில் வாழ்ந்த நாம் எத்தகைய கலக்கத்துடன் வாழ்ந்தோம்.

வன்னி வாழ் மக்கள் நிரந்தர பயம், பீதியுடன் தான் வாழ்கின்றனர். இரவு வேளையில் நடைபெறும் விமானத் தாக்குதல்கள் அவர்களை மேலும் பீதி அடையவே செய்யும். ஆகவே, தயவுசெய்து இரவுவேளை தாக்குதல்களை உடன்நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com