Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா வத்ரா ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான நளினியை சந்தித்தமையானது படுகொலை விசாரணையை திரும்ப மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு வலுவூட்டியிருப்பதாக நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி தெரிவித்துள்ளார்.

படுகொலையில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து பிரியங்கா சந்தேகம் கொண்டிருப்பதாகவும் இந்த வழக்குக் குறித்து மேலும் விசாரணை செய்வதற்கான சாத்தியம் தற்போதும் இருப்பதாகவும் துரைசாமி நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

விசேட விசாரணைக்குழுவும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் கியூப் பிரிவும் மேற்கொண்ட விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடையவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுவொரு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விசாரணையாகும். அதனாலேயே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 26 பேரில் 19 பேரை உச்சநீதிமன்றம் விடுவித்தது. விசேட தடா நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கியிருந்தது என்றும் துரைசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உதவிய நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் மத்திய புலனாய்வுப் பிரிவு தோல்வி கண்டுவிட்டதாகவும் துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மே 17, 1991 வரை தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வருகை தருவதற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

டில்லியில் மே 19 இல் இந்தப் பயணம் தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது, அச்சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த யோசனையை எதிர்த்ததாகவும் பயணத்தை ரத்துச்செய்யுமாறு கோரியதாகவும், ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

ராஜீவ் சென்னைக்கு வந்து ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் உரையாற்றப்போவதாக யார் குற்றவாளிக்கு அறிவித்தது? என்று துரைசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பயண ஒழுங்கின் பிரகாரம் மே 21 இல் ஷ்ரீ பெரும்புதூர் கூட்டத்தின் பின்னர் ராஜீவ் அங்கு தங்கியிருந்திருக்க வேண்டும். மீண்டும் இது தொடர்பாக ராமமூர்த்தி ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ராஜீவ் தங்கியிருப்பதற்குரிய நல்ல ஹோட்டல் அங்கு இல்லையென அவர் கூறியிருந்தார். ஆனால், உயர்மட்டம் தங்கியிருக்கவே வலியுறுத்தியிருந்தது.

கூட்டம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொள்ளப்படவிருந்த முதல் முயற்சி தோல்விகண்டால் ராஜீவ் தங்கியிருக்கும் இடத்தில் மற்றொரு முயற்சியை மேற்கொள்வதற்காக குற்றவாளிக்கு உதவும் திட்டமே இதுவாகும் என்று துரைசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ராஜீவ் மேற்கொள்ளும் பயண நிகழ்ச்சித் திட்டப் பிரதியை உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் கேட்டிருந்தபோதும் அந்த நிகழ்ச்சி நிரலை வழங்க காங்கிரஸ் உயர்மட்டம் மறுத்துவிட்டது. பயண ஒழுங்கின் பிரகாரம் விழாக் கூட்டம் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டிற்கு ராஜீவ் வரவிருந்தார். விமானத் தொழில்நுட்பக் கோளாறால் ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்தை அவர் ரத்துச் செய்திருந்தார். அவர் இரவு தங்குவதற்காக உள்ளூர் சுற்றுலா விடுதிக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் பொழுது அவருக்கு வயலர்ஸ் மூலம் அழைப்புக் கிடைத்தது. அடுத்த விமானத்தில் சென்னை செல்ல முடியுமென அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

யார் இதனை ஏற்பாடு செய்தார்கள்? ஏன்? என்று துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்த முக்கியமான கேள்விகளுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு உரிய பதிலை வழங்கவில்லையெனவும் இந்தக் கோணங்களிலிருந்து பார்த்தால் மேலும் விசாரணை செய்வதற்கு இடமிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரியங்கா - நளினி சந்திப்புக்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். தனது தந்தையின் கொலையின் பின்னணியிலுள்ள உண்மையை நிச்சயப்படுத்திக்கொள்ள பிரியங்கா விரும்பியிருக்கக்கூடுமெனவும் துரைசாமி கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com