Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
[19 - April - 2008] [Font Size - A - A - A]
* `மூதூர் படுகொலை போர்க்குற்றம்'; கடும் விசனம்

பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமர்வுகளின் பணியை அவதானித்து வந்த சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பும் (ஏ.சி.எவ். அல்லது ACTION AGAINST HUNGER) இலங்கையில் தனது நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதெனத் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் போது சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் பிரசன்னமானது விசாரணை நடவடிக்கைகளின் நம்பகத்தன்மைக்கு மிகவும் அத்தியாவசியமானதென பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு எப்போதுமே கருதி வந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது நடைமுறைகளை மேம்படுத்துவதற்குரிய சிபார்சுகளை பலதடவைகள் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்திருந்த போதும் அவை ஒரு போதும் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. சர்வதேச நிபுணர்கள் எழுப்பியிருக்கும் ஆட்சேபனைகளால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கழுவானது சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்குமா என்பது தொடர்பாக பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.

மூதூர் சம்பவம் தொடர்பாக வேறுபட்ட வட்டாரங்களிலிருந்து சகல தகவல்களையும் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு அறிந்தது. ஆனால், அந்த அமைப்பு ஒரு போதும் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கவில்லை. குற்றச்சாட்டுக்கான பொறுப்புப் பற்றிய தீர்ப்புப் பற்றியோ அல்லது குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்கள் பற்றியோ இந்த அமைப்பு கருத்தெதனையும் வெளியிட்டிருக்கவில்லை. சந்தேக நபர்களை விசாரிப்பது விசாரணை நீதிமன்றத்தின் கடமையென அந்த அமைப்பு கருதுகிறது. ஆதலால், சட்ட நடவடிக்கைகளுக்குப் புறம்பாக வெளியிடப்படும் தகவல்கள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பு இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரணையாளர்களோ அல்லது மனித உரிமை அமைப்போ அல்லவென்றும் உண்மையானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகளுக்குக் கோரும் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்றும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது.

1979 இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 43 நாடுகளில் பட்டினிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. எந்தவொரு குற்றச்செயலிலும் சம்பந்தப்படாத தமக்கு 2006 ஆகஸ்ட் 4 இல் மூதூரில் குற்றச் செயல் இடம்பெற்றிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன், அங்கு இடம்பெற்ற மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலையானது மனிதாபிமான அமைப்புகளின் வரலாற்றில் ஒரு போதுமே இடம்பெறாததொன்று என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மூதூர் மோதலின் போது ஏற்பட்ட பொதுவான சம்பவமாக அந்தப் படுகொலைகளைக் கருத முடியாதெனவும் தமது குழுவினர் விஷேடமாக வேண்டுமென்று இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடைய மரணமானது ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தன்மையில் காணப்படுவதாகவும் சகலவுமே பிரக்ஞையுடன் குரூரத்தனமான முறையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர்கள் ஆயுதபாணிகள் அல்ல என்றும் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் இருந்ததாகவும் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்புக் கூறியுள்ளது.

இந்தப் படுகொலையின் பொறுப்பாளிகள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் அத்துடன், இப்படுகொலையானது ஜெனீவா சாசனத்தை மீறிய போர்க் குற்றம் என்று தம்மால் உறுதியாகக் கூற முடியுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்கள், யுத்தம், உள்நாட்டு மோதல்கள் போன்ற நெருக்கடி நிலைமையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே அரச சார்பற்ற நிறுவனங்களின் நோக்கமாகும். மனிதாபிமான நெருக்கடிகளையும் இடப்பெயர்வுகளையும் தவிர்ப்பதற்கு உதவுவது இந்த நிறுவனங்களின் பணியாகும், டார்பூர், செச்னியா போன்ற இடங்களில் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு இத்தகைய பணிகளில ஈடுபட்டிருக்கின்றது. ஆனால், மூதூரில் இடம்பெற்ற போன்றதொரு சம்பவம் வேறு எங்கும் இடம்பெறவில்லையென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
குழாய் நீர் கட்டணப் பட்டியலில் 15% வற் அறவிடும் திட்டம் வாபஸ்
இலங்கைத் தமிழர் கஷ்டப்படுவதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது
அரசு அறிவித்த உத்தரவாத விலைக்கு அரிசியை சந்தைப்படுத்த தீர்மானம்
சகலவித போர் நடவடிக்கையில் இருந்தும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும்
பிரணாப் முகர்ஜியுடனும் வைகோ சந்திப்பு
பொட்ட நௌபருக்கு கத்திக் குத்து வெலிக்கடையில் சக கைதிகள் கைவரிசை
புத்தளம் அகதிகளை அச்சுறுத்திய வெள்ளைவான் ஆயுதபாணிகள்
சர்வதேச நிபுணர் குழுவின் வெளியேற்றத்தையடுத்து பட்டினிக்கு எதிரான அமைப்பும் இலங்கையிலிருந்து வாபஸ்
குண்டுப் புரளியை ஏற்படுத்திய பொதியை வெடிக்க வைத்தபோது சிதறிப்பறந்த தமிழரின் கடவுச்சீட்டுக்கள்
பிரியங்கா - நளினி சந்திப்பையடுத்து வழக்கறிஞர் எழுப்பியிருக்கும் கேள்விகள்
வவுனியா இராணுவ தலைமையக வளவில் சூட்டுக்காயத்துடன் சிப்பாயின் சடலம்
இலங்கையில் நடக்கும் குண்டுத்தாக்குதல் குறித்து சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர் சங்கம் ஆராயும்
அசாத்தியமானவை பற்றி எப்போதும் நான்காணும் கனவுகள் சாத்தியமாகின்றன என்கிறார் சுவாமி ரவிசங்கர்
பிரதியமைச்சருக்கு நாளை பாராட்டு விழா
கிழக்குத் தேர்தலில் அரசதரப்பு வென்றால் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்படலாம்?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க தோட்ட நிர்வாகம் பின்னடிப்பு
சகோதரன் தாக்கி பிக்கு மரணம்
அம்பாறையில் கிராமப்புறப் பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்
சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி.வேட்பாளர் மீது முகமூடிக்குழு தாக்குதல்
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
கங்குலி தலைமையிலான நைற்றைடர் அணியிடம் 140 ஓட்டங்களினால் டிராவிட் அணி தோல்வி
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை
கிழக்கில் தேர்தலை கண்காணிக்க புதிய உள்ளூர் கண்காணிப்புக்குழு
மின்னலால் அவிசாவளை தொலைபேசி சேவை பாதிப்பு
2009ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி ஜூன் மாதத்திலிருந்து விண்ணப்பம் ஏற்கப்படும்
`படையினருடனான மோதல்களில் புலிகள் தோல்வியடைவதை தடுக்க முடியாது'
ஜெயராஜ் படுகொலை தொடர்பான விசாரணைக்கு சிரேஷ்ட படை அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட சபை
காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராக தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மாபெரும் மே தின ஆர்ப்பாட்ட பேரணி
கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறுவோரை மாத்தறை பாடசாலைகளுக்கு நியமிக்க கோரிக்கை
தேசிய கல்வியியற் கல்லூரி குறைபாடுகளை நீக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை
யுத்தப் பிரதேசங்களில் அப்பாவி மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டுவதே மலையக தொழிற்சங்க வாதிகளின் வாழ்க்கை
வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க மாணவர்களுக்கு கணினி அறிவு அவசியம்
புத்தளம் பகுதி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க திட்டம்
தனியார் பஸ்களில் கப்பம் அறவிடுவதை தடுக்க முடியாத நிலையில் அரச நிர்வாகம்
ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கு நன்றி செலுத்த வேண்டும்
கிழக்கு மாகாண தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
முஸ்லிம்கள் போடும் வாக்குகளை வைத்துக் கொண்டு ஐ.தே.க. கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியாது
தேர்தலை முன்னிட்டு அம்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள்
`யானைச்சின்னத்தில் மு.கா. வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஆதரவாளர்களுக்கு செய்த துரோகம்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 2500க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com