திருகோணமலை மடத்தடி அருள்மிகு ஷ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் போது நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஷ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக தீமிதிப்புக்கான ஏற்பாட்டையும் ஒரு பெண் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு தந்தை ஒருவர் தீமிதிப்பில் பங்குபற்றுவதையும் திரண்டிருந்த அடியார்களில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட அதிரடிப்படையினர் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவை நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடினர். இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அதிரடிப் படையின் முன்னாள் தலைமை அதிகாரி நிமால் லெவ்கேயும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.