நேபாளத்தின் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி வழங்குமென ஐ.நா.வின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்துக்கான ஐ.நா.குழுவின் தலைவர் இயன் மார்ட்டின் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளருடன் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒன்று கூடி புதிய அரசியல் நிர்ணய சட்டத்தை இயற்ற உள்ளனர்.
பல்லாண்டுகளாக நேபாளத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2006 மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.