Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* பால்வழங்கும் நிகழ்வில் நிஜாமுதீன் வலியுறுத்தல்

நாட்டின் அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென நாம் விரும்பினால், எமக்குள் இருந்துவரும் இனவாதத்தையும் பிரதேச வாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டுமென பிரதி அமைச்சர் எஸ். நிஜாமுதீன் தெரிவித்தார்.

மருதமுனை அல்மனார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பால் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகரித்துச் செல்லும் மக்களின் நெருக்கடிகள் குறித்து அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;

நம் நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதை நாம் அறிவோம். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் இனவாதம் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமாக இருந்தால், எங்கள் மத்தியில் உள்ள இனவாதங்களையும், பிரதேச வாதங்களையும் முதலில் இல்லாமல் செய்ய வேண்டும். பிரதேசவாதங்களை பரப்புவதன் மூலம் அது இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் பிரிவினையையும் பிரச்சினைகளையும் தோற்றுவிக்க வழிவகுக்கும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனையின் ஊடாக ஒவ்வொரு பெயர்களிலும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போஷாக்குக் குறைந்த மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வு இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

விலையேற்றங்களினால் குழந்தைகளுக்கு பால்மா வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நாட்டில் இடம்பெறுகின்ற யுத்தமே காரணமாகும். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்ற போது தான் விலையேற்றங்கள் குறையும். அதுவரையும் விலையேற்றங்கள் அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த யுத்தத்தில் அகப்பட்டுள்ள பொது மக்களை மீட்டெடுப்பதுவும் சமாதானத்தை ஏற்படுத்துவதும் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் மூலமே சாத்தியமாகும்.

ஆகவே, இந்த நாட்டை ஐக்கியப்பட்ட சமூக நாடாக கட்டியெழுப்புவதற்கு மக்கள் முன்வர வேண்டும். மக்கள் ஐக்கியப்படாமல் பிரிந்து பிரிந்து இனவாதம் பேசப்படுமானால் இந்த நாடு அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என்றார்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com