Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
[02 - April - 2008] [Font Size - A - A - A]
தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்குக் கிடைக்கின்ற நன்மைகளைத் தட்டிப் பறிப்பதில் முன்னிலை வகிக்கின்ற மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்டப் பகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத் தோட்டப்பகுதிகளில் தற்காலிக குடில்களில் வாழ்கின்ற ஒரு பகுதியினருக்கு 2001 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியை உரியவர்களுக்கு எவ்வாறு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக மஸ்கெலியா ஷ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இ.தொ.ஐ. முன்னணியின் உபதலைவர் கணபதி கனகராஜ் உதவிச் செயலாளர் எஸ்.சிவசுந்தரம், தலைவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் உதயகுமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.சதாசிவம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

2001 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசகராக நான் செயற்பட்ட போது, இந்த அமைச்சின் ஊடாக தோட்டப்பகுதி வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 15 கோடி ரூபா செலவழிக்கப்படாமலிருந்தது. இந்த விடயத்தை அப்போது பதவிவகித்த ஜனாதிபதி சந்திரிகாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

இதன் போது இந்த நிதியை மலையக மக்களுக்கு பயன்பெறும் வகையில் செலவழிக்குமாறு என்னிடம் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட தோட்டப் பகுதிகளில் தற்காலிக குடில்களின் விபரங்களைத் தோட்ட நிர்வாகங்கள் மூலமாக திரட்டினேன். இவர்களில் சுமார் ஐயாயிரம் பேருக்கு வீடமைத்துக் கொள்வதற்காக தலா 30 ஆயிரம் ரூபா வீதம் மக்கள் வங்கியில் வைப்புச் செய்து உரிய தொழிலாளர் குடும்பங்களுக்கு வங்கிப் புத்தகத்தை கையளித்தோம். இதன்போது மலையகத்தின் அரசியல்வாதிகள் சிலர் இதனை தேர்தல் கால குண்டென்றும், ஏமாற்று வேலை என்றும் கொச்சைப்படுத்தினார்கள். வைப்புப் புத்தகங்களை ஒரு சில அரசியல் வாதிகள் முன்னிலையில் எரியூட்டி மகிழ்ந்தார்கள்.

இதன் பின்பு அரசியலில் மாற்றம் வந்தது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை மாறிமாறி பொறுப்பெடுத்த பி.சந்திரசேகரன் முத்துசிவலிங்கம் போன்றோர் மேற்படி வைப்புப் பணத்தை குறிப்பிட்ட தொழிலாளிகள் வீடமைத்துக் கொள்ள பயன்படுத்துவதற்கு முழு மூச்சுடன் இடையூறு செய்தனர்.

இந்த நிதியை மக்கள் பயன்படுத்தினால் சதாசிவத்தின் செல்வாக்கு அதிகரிக்குமென்று அச்சமடைந்தனர்.

குடிசைகளில் மழையாலும் பணியாலும் வெயிலாலும் அல்லலுறுகின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நிதிசட்ட திட்டங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்ட நிதியை எந்த வகையிலும் சரி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தோம்.

இதற்கு மனித உரிமை இல்லம் எமக்கு பேருதவி செய்தது.

இந்த வழக்கின் தொடர் விசாரணைக்கு பிறகு குறிப்பிட்ட வழக்காளிக்கு வைப்பு பணத்தை வழங்குமாறு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எமது கட்சியைச் சேர்ந்த வழக்காளி இன்று மக்கள் வங்கியிலிருந்து தனக்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு இந்த நிதியைப் பெற்றுக்கொடுத்தது போல ஏனையவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதே எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

அத்துடன் உரிய வைப்புத் தொகையையும் அதற்குரிய வட்டியையும் பெற்றுக்கொடுத்தே தீருவோம். எனவே மலையகத்துக்கு உண்மையாக சேவை செய்கின்றவர்கள் யார் என்பதை இன்று மலையக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com