Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* தந்தை செல்வா நினைவு வழிபாட்டில் ஆயர் ஜெபநேசன்

தந்தை செல்வநாயகம் ஒருபோதுமே தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதில்லை. எல்லா மதங்களையும் சார்ந்த தமிழ் மக்களைத் தனது மக்களாகவே நேசித்துவந்த பெரியார். தமிழ் மக்களுக்காக அனுதினமும் பிரார்த்திப்பார். தள்ளாத வயதிலும் முழங்காலில் அமர்ந்து செபிப்பதை நான் அவதானித்துள்ளேன்.

தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற ஆயரும் அறங்காவல் குழுவின் தலைவருமான அதி.வண.எஸ்.ஜெபநேசன் இவ்வாறு கூறினார்.

சுண்டுக்குளி புனித யோவான் தேவாலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தந்தை செல்வநாயகத்தின் 110 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டில் அருளுரையாற்றும்போதே ஆயர் இவ்வாறு கூறினார்.

ஆயர் ஜெபநேசன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

"தந்தை செல்வா தனது கொள்கையில் இருந்து வழுவாது தமிழ் மக்களுக்காகவே இறுதி வரையும் அர்ப்பணிப்புடன் 1956 முதல் 1977 வரையும் பணியாற்றியதால் தமிழ்பேசும் மக்களின் தலைவராக இருந்து வந்தார்.

இந்திய, பாகிஸ்தான் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது இன்று இவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டத்தைப் போலவே நாளை தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் கொண்டு வரப்படும் என்று தீர்க்கதரிசனமாக கூறியிருந்தார்.

1952 இல் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வடக்குக் கிழக்கில் போட்டியிட்டபோது வடக்கில் வன்னியசிங்கமும் கிழக்கில் இராஜவரோதயமும் வெற்றி பெற்றனர். எனினும் தந்தை செல்வா மனம் தளரவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தினார்.

1956 பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி அமோக வெற்றிபெற்றது. வடக்குக் கிழக்கில் இருந்து 10 ஆசனங்கள் கிடைத்தன. அன்றிலிருந்து நன்நெறிதவறாத அரசியல்வாதியாக தமிழ் மக்களின் தலைவராக தந்தை செல்வா விளங்கினார்.

தந்தை செல்வா ஓரு போதுமே மற்றவர்களின் பணத்தில் தமிழரசுக் கட்சியை வளர்க்கவில்லை. தனது தென்னந்தோட்டத்தை விற்று கட்சிக்காக செலவு செய்தவர். அவரிடம் இருந்த பண்புகளால் அவர் எல்லா மக்களாலும் கவரப்பட்டார்.

அவரது அமைதியான குணம், வைராக்கியம் அவரை உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றது. ஒரு போதும் விலைபோகாத தலைவராகவே வாழ்ந்தார்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போல சகல உரிமைகளும் பெற்ற இனமாக சுதந்திரமாகவே வாழ வேண்டும் என்று போராடி வந்தார்.

அத்தகைய பெருமகனை நாம் இன்று நினைவு கூருகின்றோம். இப்படிப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரை எமது இளம் சமுதாயம் அறிந்துகொள்வதற்கு வசதியாக தந்தை செல்வா அறங்காவல் குழுவினரின் அவரது வாழ்க்கையைத் திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்ற கனவு எதிர்காலத்தில் நிறைவேறும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக" என்றார் .

இந்த நிகழ்வில் பெரும்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com