ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மிலிருந்து தனது 35.2 சதவீத பங்குகளை ஜப்பானின் நிப்பொன் ரெலிகிராப், ரெலிபோன் (என்.ரி.ரி.) கம்பனி விற்பனை செய்திருப்பதாக கொழும்பு பங்கு பரிவர்த்தனை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதனை மலேசியாவின் குளோபல் ரெலிக்கொமியூனிக்கேஷன்ஸ் ஹோல்டிங்ஸ் கொள்வனவு செய்துள்ளது. இதன்மூலம் ஜப்பானிய நிறுவனமொன்று இலங்கையில் மேற்கொண்டிருந்த பாரிய முதலீடு முடிவுக்கு வந்திருக்கிறது.
குளோபல் கொமினிக்கேஷன்ஸ் நிறுவனம் மலேசியாவின் மக்லிஸ்ஸ் கொமினிகேனுக்கு சொந்தமானதாகும். பங்கொன்று 50 ரூபா 50 சதவீதம் என்.ரி.ரி.யிடமிருந்து குளோபல் கொமினிகேஷன்ஸ் பெற்றுள்ளது.
1997 இல் ஷ்ரீலங்கா ரெலிகொம் தனியார் மயமாக்கப்பட்டது. அதன் மூன்றிலொரு பங்குகள் 225 மில்லியன் டொலர்களுக்கு என்.ரி.ரி.க்கு விற்பனை செய்யப்பட்டது. 49.5 சதவீதப் பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருந்தது. எஞ்சியவை பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பங்குகளாகும்.
2007 இல் ஷ்ரீலங்கா ரெலிகொம்மின் நிகர இலாபம் எதிர்பார்த்ததைவிட 4 சதவீதமாக அதாவது 52.25 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அத்துடன், கையடக்கத் தொலைபேசி சந்தையில் 16 சதவீதத்தை ஷ்ரீலங்கா ரெலிகொம் தனது பொறுப்பில் வைத்திருக்கிறது.