Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* அக்ஷன்பாம் படுகொலை வழக்கில் சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

மூதூர் பிரதேசம் 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக படுகொலை செய்யப்பட்ட அக்ஷன்பாம் ஊழியர் கூறியதாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர் கூறினார்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட `அக்ஷன்பாம்' ஊழியர்களின் கொலை தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியம் அளிக்கையிலேயே சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாட்சி மேலும் தெரிவிக்கையில்;

`படுகொலை செய்யப்பட்ட ஜெயசீலன் `அக்ஷன்பாம்' நிறுவனத்தில் சுகாதார மேம்பாட்டாளராகக் கடமையாற்றினார். இரண்டு வருடத்திற்கு மேலாக மூதூரில் பணியாற்றி வந்தார்.

மூதூரில் 2006 ஆகஸ்ட் முதலாம் திகதி மாலை மோதல்கள் இடம்பெறுவதாக எனக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நான் அவரை ஜூலை 31ஆம் திகதி மூதூர் இறங்குதுறையில் சந்தித்தேன். அன்றும் அவர் மூதூரில்தான் தங்கியிருந்தார்.

இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மூதூரில் மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். முதலாம் திகதி மாலையில் தான் மூதூரில் மோதல் ஆரம்பித்திருந்தது. மூதூரில் அக்ஷன்பாம் நிறுவனத்தினரின் அலுவலகம் எங்கு அமைந்துள்ளதென எனக்குத் தெரியும்.

இரண்டாம் திகதி மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நான் அக்ஷன்பாம் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவருடன் கதைத்திருந்தேன். மூன்றாம் திகதி வரை அவருடன் கதைக்கக் கூடியதாக இருந்தது.

மூன்றாம் திகதி காலையில் நான் அழைப்பை ஏற்படுத்தி இருந்த போது தமக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் மூதூருக்கு வெளியில் வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் கூறினார்.

அன்று மாலை அவர் என்னுடன் தானாக அழைப்பை ஏற்படுத்தி கதைக்கும் போது விடுதலைப் புலிகள் மூதூர் நகருக்குள் வந்து நிற்பதாகவும் மோதல்கள் நடப்பதாகவும் வேறு நிலைவரங்கள் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். அவர் என்னுடைய வீட்டின் தொலைபேசிக்கே அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால், அவர் எந்தத் தொலைபேசியில் இருந்து அழைப்பை ஏற்படுத்தி இருந்தார் என எனக்குத் தெரியாது.

மறுநாள் காலை அதாவது, நான்காம் திகதியும் அவரே எனக்கு தொடர்பை ஏற்படுத்தி கதைத்த போது மூதூர் நகர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தமது அலுவலகத்தை சுற்றிய பிரதேசங்களிலும் இராணுவமே உள்ளதென்றும் அவர் கூறினார்.

ஆனால், அப்போதும் அவர் எந்த தொலைபேசியில் இருந்து கதைத்தார் என்பது எனக்குத் தெரியாதென" சாட்சி மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய இவரின் சாட்சியம் நிறைவடைந்தது. தொடர்ந்தும் இச் சாட்சி, சாட்சி கூறுவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com