Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை நல்க முடியும்; உயர்ஸ்தானிகர் காதி லுக்மன்

ரொஷான் நாகலிங்கம்

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவுஸ்திரேலியா நிதி உதவியூடாக ஒத்துழைப்பு வழங்கிவருவதாகத் தெரிவித்த அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி காதி லுக்மன், இந்த விடயம் குறித்து கொழும்புடன் அவுஸ்திரேலிய அரசு கலந்துரையாடலை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளித்து ஆளுமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அவுஸ்திரேலிய அரசு 6 மில்லியன் ரூபாவினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமை கற்கை நிலையத்துக்கு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய உயர்ஸ்தானிகர் மேலும் கூறியதாவது;

மனித உரிமையை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டு தோறும் அவுஸ்திரேலியா தனது மனித உரிமைகளுக்கான சிறிய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் அங்குள்ள அமைப்பு மூலம் நேரடியாகவும் மாற்று வழிகளிலும் உதவிவருகின்றது.

இலங்கையில் 300க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமை தொடர்பில் அடிப்படை அறிவினை மேலும் அதிகரிப்பது இது தொடர்பில் பொறுப்புடன் அவர்கள் அதனை அறிக்கையிடுதல் மற்றும் ஊடகம் மூலம் மனித உரிமைகள் தொடர்பில் பிரசாரத்தை மேற்கொண்டு சிவில் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்குடனேயே தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்துக்கு நிதியுதவியளித்துள்ளோம்.

மனித உரிமை என்பது இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் முக்கியமானது. எமது நிதியுதவி மூலம் ஊடகவியலாளருக்கு பயிற்சிப்பட்டறையை நடத்துவதன் மூலம் அவர்களுக்கிடையில் பரந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி பிரசாரத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு மனித உரிமை மீறலுக்கு எதிராக தனிநபரையும் சிவில் சமூகத்தையும் போராட வைப்பதாகும்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலியா இலங்கையரசுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. மனித நேயப் பணி மற்றும் மனிதாபிமான அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையில் சிறந்த சிநேகபூர்வ உறவுள்ளது.

இந்த உறவினை மேலும் பலப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு உதவக் காத்திருக்கின்றது. இலங்கையின் வடக்கு, தெற்கு, வடமேற்கு பகுதிகளில் மனிதநேயப் பணிகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

டாக்டர் ரவீந்திர பெர்னாண்டோ

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திர பெர்னாண்டோ உரையாற்றுகையில்;

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகிறது. நாம் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியில் சென்று ஆராய்வதில்லை. நாம் மனித உரிமைகள் தொடர்பில் கற்கைகளை மாத்திரம் மேற்கொள்கின்றோம்.

எமது நிலையத்தால் இராணுவம், பொலிஸார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமசேவகர் உட்பட அரச அதிகாரிகளுக்கு மனித உரிமை தொடர்பில் பயிற்சிகளை அளித்துள்ளோம். அளித்து வருகின்றோம். இந்த நிதியுதவியளித்ததையிட்டு அவுஸ்திரேலிய அரசுக்கும் உயர்ஸ்தானிகரகத்துக்கும் எமது நன்றிகள்.

மனித உரிமை விடயத்தில் ஊடகங்கள் முக்கிய பணிகளை ஆற்ற முடியும். இது தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.

நாம் ஊடகவியலாளரை மனித உரிமை தொடர்பில் ஊக்குவிக்க பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை மூன்று மொழிகளிலும் மேற்கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் வலைப்பின்னலை உருவாக்க இந்த நிதியுதவி வழிவகுத்துள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம் என்றார்.

இதன்போது 6 மில்லியன் ரூபா காசோலையை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காதி லுக்மன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையத்துக்கான தலைவரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகராலய ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com