Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
[02 - April - 2008] [Font Size - A - A - A]
* சர்ச்சையை கிளப்பும் சட்ட வல்லுநர்கள்

பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கும் கித்துல்கொட மற்றுமொரு அரச பதவியை வகிப்பது குறித்து பெரும் சர்ச்சை மூளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பணியாற்றிய பிரியானி விஜயசேகர ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து அவசரமாக அவரின் வெற்றிடத்திற்கு பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக ஜனாதிபதியினால் கித்துல்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நியமனத்திற்கு ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது இந்நியமனத்திற்கு எதிராக பெரும் போர்க்கொடி தூக்கப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளன.

இந்நிலையில் பதில் செயலாளர் நாயகம் நியமனம் குறித்து சட்ட வியலாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதாவது கித்துல்கொட அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியை தற்போது வகிக்கும் நிலையில் அவரினால் மற்றுமொரு அரச பதவியை வகிக்க முடியுமாவென்பது பிரதான கேள்வியாகும்.

அரசியல் கட்சி சார்புகளுக்கு அப்பால் நின்று செயற்படுவது பாராளுமன்ற செயலாளரின் அடிப்படை பணியாகுமென சுட்டிக்காட்டும் சட்டவியலாளர்கள் எதிர்க் கட்சிகளின் விருப்பமின்றி எத்தனை நாட்கள் பதில் செயலாளர் நாயகமாக கித்துல்கொட நீடிக்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது குறித்து ரான்ஸ்பெரன்ஸி இன்டநஷ்னல் ஷ்ரீலங்கா நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.ஸி.வெலியமுன கூறுகையில்;

"அரசியலமைப்பு பேரவையில் முக்கிய பதவி வகிக்கும் கித்துல்கொட மற்றுமொரு பதவியை வகிக்க முடியாது. இது பல முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இருபதவிகளிலும் சுயாதீன செயற்பாடு அவசியம். இருபதவிகளை வகிக்கும் போது சுயாதீனம் காக்க முடியுமா என்ற சந்தேகம் மேலோங்குகிறது" என்றார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறும் போது,

அரசியல் அமைப்பு பேரவை நியமிக்கப்படாமை காரணமாகவே இச்சர்ச்சை எழுந்துள்ளது. அரசியல் செல்வாக்கு மூலம் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாவது எதிர்க்கட்சிகளின் எதிர்மறை கருத்துக்களுக்கே வழிவகுக்குமென்றார்.

இதேவேளை, அரசாங்கத்தரப்பானது அரசியலமைப்பு பேரவைக்கு தற்போது உறுப்பினர்களை நியமிக்க முடியாதென உறுதியாகவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு நிரந்தர செயலாளர் நாயகத்தை நியமிப்பதில் காலதாமதமேற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
அரசாங்கத்தில் இரு உயர் பதவிகளை கித்துல்கொட வகிப்பது எப்படி?
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் ஐ.ம.சு.மு. பங்காளிகள் தொடர்ந்து இழுபறி
மின்னேரியா படை முகாமில் மின்னல் தாக்குதல் நான்கு படையினர் பலி; 63 பேர் படுகாயம்
மட்டு.மாவட்டத்தில் இதுவரை 1கட்சி, 1சுயேச்சைக் குழு வேட்புமனு
ஊர்காவல்படைவீரர், 2 பொலிஸார் மூதூர் படுகொலையின் பொறுப்பாளிகள்; வெளிப்படையாக மூடிமறைக்கிறது அரசு
குருவிட்ட சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதிகளில் நால்வர் சுட்டுக் கொலை; மூவர் படுகாயம்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 7 - 10 ஏ, 18 - 9 ஏ, 46 - 8 ஏ
கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் பெரும் பீதியில் யாழ். குடாநாட்டு மக்கள்
ஷெல் சிதறல்களால் மடு தேவாலய குருமார் மடத்துக்கு சேதம்
இணையத் தளத்தில் பரீட்சை பெறுபேற்றை பார்வையிடலாம்
ஏப்ரல் 27- 29 வரை கொழும்பில் பொதுநலவாய இளைய அமைச்சர்களின் மாநாடு
3 மாத காலத்தில் 112 உடல்கள் இரு தரப்புகளிடையேயும் பரிமாற்றம்
வவுனியாவில் வெள்ளைவான் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டோர் குறித்து பெற்றோர் முறையீடு
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிழக் கிலிருந்து விசேட பஸ் சேவை
மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 6 மில்லியன் ரூபா நிதியுதவி
பதுளையில் திடீர் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் 8 பேர் கைது
நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற தாய் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில்
கல்முனைக் கடலில் சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக் கோரி ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்
ஜெயசீலன் இறுதியாக என்னுடன் தொலைபேசியில் கதைத்த போது தமது அலுவலகத்தை சுற்றி இராணுவம் நிற்பதாகக் கூறினார்
மன்னாரில் நேற்று அதிகாலை இடம் பெற்ற பாரிய படை நகர்வு முறியடிக்கப்பட்டதாக தகவல்
தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஹம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் கூட்டு ஆர்ப்பாட்டம்
நூறு அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது சாரதி, நடத்துநருக்கு படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஷெல் தாக்குதலில் முருங்கன் ஆஸ்பத்திரி சேதமடைந்தது
ஜப்பான் நிப்பொனின் ரெலிக்கொம் பங்குகள் மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு போட்டியிடாது
கிழக்கு தேர்தலை ஒத்திவைக்க யாரும் கோராத நிலையில் பிற்போடப்படாதென்ற அரசின் அறிவிப்பில் சந்தேகம்
துப்பாக்கியால் சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
இலங்கை துணைத் தூதரகத்தின் தலையீட்டை தடுப்பதுடன் `பிரபாகரன்' படப்பிரதிகளை முற்றாக அழிக்க வேண்டும்
ஆசிரியரின் சம்பளத்துடன் தலைமறைவான அதிபர்; இடைநிறுத்துமாறு உத்தரவு
கொள்கையில் இருந்து வழுவாது இறுதிவரை தமிழ் மக்களுக்காகவே பணியாற்றியவர்
சமநிலை பேணி எதிர்காலத்தில் அறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்ப்பு
நான்கு நாள் சிசு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை தாய் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது
மொனராகலை பிரதேச சபை உபதலைவரின் கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
களனிவெளி புகையிரத சேவையை இரத்தினபுரி வரை விஸ்தரிக்க நடவடிக்கை
ஐ.தே.க.வின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களை கண்டனத்துக்குள்ளாக்கும் செயற்பாடு
`சமூகத்துக்கு கிடைக்கின்ற நன்மைகளை தட்டிப் பறிக்கும் மலையக அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்'
தகவல் திணைக்கள அடையாள அட்டையிலிருந்து பிரதேச ஊடகவியலாளர் என்ற பதத்தை நீக்க ஏற்பாடு
ஒற்றுமையை விரும்பினால் இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டும்
யாழ். மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு சர்வதேச புலம்பெயர் நிறுவனம் உதவி
ஒழுக்கமுள்ள பண்பான மாணவ சமூகத்தை எதிர்காலத்தில் நாம் உருவாக்க வேண்டும்
இலவச பாடநூல் உரிய முறையில் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com