இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியில் பங்கேற்பதால் இங்கிலாந்துக்கு எதிரான 2 பயிற்சி ஆட்டங்களில் கப்டன் டேனியல் வெட்டோரி உள்ளிட்ட 5 நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இத் தொடருக்கு முன்னதாக ஏப்ரல் 27 ஆம் திகதி எம்.சி.சி. அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்திலும் அதைத் தொடர்ந்து கென்ற் அணியுடன் 3 நாள் பயிற்சிப் போட்டியிலும் நியூஸிலாந்து அணி பங்கேற்கவுள்ளது.
இப்போட்டிகளில் வெட்டோரி, மெக்கலம், ஓரம், ேராஸ் டெய்லர், கைல் மில்ஸ் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என நியூசிலாந்து கிரிக்கெட் சபையில் முதன்மைச் செயல் அதிகாரி ஜஸ்ரின் வோகன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் அவர்கள் அணியுடன் இணைந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.