Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கைத் தமிழருக்கு போலி கடவுச்சீட்டு விசாக்கள் தயாரித்த இருவர் கைது
[20 - April - 2008] [Font Size - A - A - A]
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு போலி கடவுச்சீட்டு மற்றும் விசா தயாரித்து கொடுத்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி கடவுச்சீட்டுகள், போலி விசாக்கள், போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. கொலனி பசும்பொன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் `போலி கடவுச்சீட்டு' தயாரிப்பதாக மத்திய குற்றப் பிரிவு பொலிஸுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை ஆணையர் விஜயகுமாரி, உதவி ஆணையர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம், உதவி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது.

விசாரணையில் அந்த வீட்டில் இருந்த வித்யா சரவணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் இணைந்து இலங்கையைச் சேர்ந்த பலருக்கு கடவுச்சீட்டில் திருத்தம் செய்தும் போலி விசாக்களை தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

`இலங்கையைச் சேர்ந்த குமார், குட்டி, செல்வரத்தினம், தமிழகத்தைச் சேர்ந்த சலீம் சேத்தி, ராமமூர்த்தி ஆகியோருக்கு கடவுச்சீட்டில் திருத்தம் செய்து கொடுத்துள்ளனர். எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் விசாவை கணினி மூலமாகப் போலியாகத் தயாரித்து கொடுத்துள்ளனர்.

அமெரிக்கா, லண்டன், அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு போலி விசாக்களை கணினியில் தயாரித்து கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 53 போலி கடவுச்சீட்டுகளும் 40 போலி விசாக்களும் 48 போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன' என்றார் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் மீதான உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுங்கள்
கிழக்கில் மேலாதிக்கத்தை அமுல்படுத்த நினைக்கும் அரசின் நோக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை
வேலூரில் நளினியை பிரியங்கா சந்தித்த இடம் தொடர்பாக சர்ச்சை
கனடிய வெளிவிவகார அமைச்சரை பதவி விலக எதிரணி வலியுறுத்தல்
மைத்திரிபால சிறிசேன லண்டனில் மங்களவுடன் இரகசிய சந்திப்பு?
ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவராக பிமல் கட்சியின் பிரசார செயலாளராக சுனில் ஹந்துநெத்தி
நாளை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்
ஜெயராஜை கொலை செய்யும் திட்டம் தெஹிவளை அத்திட்டியவில் தயாரிப்பு
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
உள்ளூரில் போதியளவு நெல் கையிருப்பில் இருக்கும் போது அரிசிக்கு ஏன் தட்டுப்பாடு?
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு
குடும்பஸ்தர் குத்திக்கொலை
வட போர் முனை மோதல்களில் படைவீரர் பலி,9 பேர் காயம்
இலங்கை தொடர்பாக ஒஸ்லோவில் கருத்தரங்கு
வடக்கு - தெற்கு மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை அடையலாம்
குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுக்க விழிப்புக் குழுக்களை அமைக்க நடவடிக்கை
அவரிவத்தையில் தொழில்புரியும் மலையக வாலிபர் பொலிஸாரால் கைது
புதுவித காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 750 பேருக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை
கிழக்கில் அடுத்த வாரம் முதல் ஐ.தே.க. தீவிர பிரசாரத்தில் இறங்கும்
இலங்கைத் தமிழருக்கு போலி கடவுச்சீட்டு விசாக்கள் தயாரித்த இருவர் கைது
யாழ்.குடாநாட்டில் அரிசி விலை அதிகரிப்பு
போரதீவில் இரு கிளைமோர்கள் மீட்பு
இடம்பெயர்ந்த அல்லைப்பிட்டி மக்கள் மீளவும் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com