கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர பிரசார நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரசார நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கு பற்றவுள்ளனர்.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்தப் பிரசார நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தமிழ் மொழியில் உரையாற்றும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.